வாடகை ஆட்டோ, கார்களில் பயணிக்க இ-பதிவு... பெறுவது எப்படி?

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை குறைந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டள்ளது. இந்நேரத்தில் அரசு, தனியார் பேருந்து, வணிக வளாகங்கள், திரையரங்குகள், தேநீர் கடை, மத வழிபாட்டு தலங்கள், சலூன் கடைகள், டாஸ்மாக் கடைகள், தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன. உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி, கூரியர் போன்ற தபால் சேவைக்கு அனுமதி, உணவு மற்றும் பொருள்களை விநியோகிக்க ஆன்லைகள் நிறுவனங்களுக்கு அனுமதி போன்ற விதிமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன.

இந்த ஊரடங்கின்போது வாடகை ஆட்டோக்கள், கார்கள் மூலம் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பயணத்திற்கு இ-பதிவு அவசியம். எனவே இ-பதிவு இணையதளத்தில் வாடகை ஆட்டோக்கள், கார்கள் மூலம் பயணிக்க அனுமதி பெற வேண்டும். இதற்கு https://eregister.tnega.org எனும் இணையத்தளத்தில் சென்று முறையான ஆவணங்களை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறித்தி உள்ளது.

மேலும் இதில் தனிநபர் மற்றும் குழுவாக சாலை வழிப்பயணம் என்ற இணைப்பிற்கு சென்று பயணத்தின் முறையை குறிப்பிட்டு பதிவு செய்துகொள்ள வேண்டும். பயணம் செய்வதற்கான காரணத்தையும் இதில் விளக்க வேண்டும். இதற்கான பட்டியலில் மருத்துவக் காரணம், இறப்பு அல்லது ஈமச் சடங்குகள், தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மற்றவை ஆகிய பிரிவுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்தக் காரணங்களில் எதுவெனத் தேர்வு செய்த அதற்கான ஆவணத்தையும் உள்ளீடு செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

லைவில் தற்கொலை முயற்சி… தக்க சமயத்தில் காப்பாற்றிய ஃபேஸ்புக் நிறுவனம்!

டெல்லியில் வசித்து வந்த 39 வயதான நபர் ஒருவர் ஃபேஸ்புக் லைவிலேயே தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இருவேறு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டால் ஆபத்தா? தடுப்பூசியில் கலப்பு அவசியமா?

முன்னதாக முதல் டோஸ் செலுத்திக் கொண்ட கொரோனா தடுப்பூசியே (28 நாட்கள் இடைவெளியில்) அடுத்த முறையும் செலுத்திக் கொள்ள வேண்டும்

'மாரி 2' நடிகர் குழந்தையின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரலாகும் குடும்ப புகைப்படம்!

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகரின் குழந்தைக்கு முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு: திரையுலக பிரபலங்கள் இரங்கல்!

தத்ரூபமாக ஓவியம் வரையும் ஓவிய கலைஞரான இளையராஜா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த செய்தி திரையுலக பிரபலங்களையும் ஓவிய கலைஞர்களையும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

தடுப்பூசி போட்டவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்த செல்பி: இணையதளத்தில் வைரல்!

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.