தீபா வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்தது ஏன்?

  • IndiaGlitz, [Saturday,February 10 2018]

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வதாக தகவல்கள் பரவியது

சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு மித்தேஸ்குமார் என்பவர் வந்ததாகவும், மற்ற அதிகாரிகள் வந்தவுடன் ரெய்டு ஆரம்பமாகும் என்றும் கூறப்பட்டதாகவும் தகவல்கள் பரவியது

இருப்பினும் மித்தேஸ்குமார் மீது சந்தேகம் கொண்ட தீபாவின் வழக்கறிஞர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்துவந்து அந்த அதிகாரியிடம் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கூறினார். இந்த நிலையில் திடீரென அந்த அதிகாரி சுவர் ஏறி குதித்து போலீசாரிடம் இருந்து தப்பிவிட்டார். போலீசாரும் சுவர் ஏறி அந்த நபரை விரட்டினர். ஆனால் அந்த மர்ம ஆசாமி மாயமாய் மறைந்துவிட்டார். இதன்பின்னர்தான் அவர், போலி வருமான வரித்துறை அதிகாரி என்றும் அவர் கொண்டு வந்த ரெய்டு ஆணையும் போலி என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் தீபா வீடு அருகே சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

More News

ரஜினி என்ன பி.இ. பட்டதாரியா? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது இந்தியாவை விட முதலில் தமிழகத்தில் கெட்டு போயிருக்கும் சிஸ்டத்தை முதலில் சரிசெய்ய வேண்டும்

ஜீயரின் ஒன்றரை நாள் உண்ணாவிரதம் திடீர் நிறுத்தம்! காரணம் என்ன?

ஆண்டாள் குறித்து கவியரசு வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜீயர் உண்ணாவிரதம் இருந்தார்

மணிரத்னம் படத்தின் டைட்டில் மற்றும் முழுவிபரங்கள்

சிம்பு, விஜய்சேதுபதி உள்பட மல்டிஸ்டார்கள் நடிக்கவுள்ள படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

புதியதாக அறிமுகமாகும் டிவிக்கு மாப்பிள்ளையாகிறார் ஆர்யா

இந்தியின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று கலர்ஸ் டிவி என்பது அனைவருக்கும் தெரியும். இந்த டிவி வரும் 19ஆம் தேதி முதல் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.

அன்புச்செழியன் முன்னிலையில் 'திமிர் பிடிச்சவன்'

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர், இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.