மீண்டும் இணையும் ராம் - சீதா மகாலட்சுமி? 'சீதா ராமம்' இரண்டாம் பாகமா?

சமீபத்தில் வெளியான ‘சீதா ராமம்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படம் அனைத்து ரசிகர்களும் பாராட்டப்பட்டது என்பதும் தெரிந்ததே.

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது என்றும் ஒவ்வொருவரும் அந்த கேரக்டராகவே மாறியதால் பார்வையாளர்கள் படத்துடன் ஒன்றினர் என்பதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘சீதா ராமம்’ படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி அடுத்த படத்தை இயக்க தயாராகி வருவதாகவும் ‘சீதா ராமம்’படத்தை தயாரித்த அஸ்வினி தத் இந்த படத்தை மீண்டும் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுவதால் இந்தப் படம் ‘சீதா ராமம்’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இன்னும் உறுதி செய்யவில்லை என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.