ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் இருந்ததா? பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?

  • IndiaGlitz, [Monday,February 26 2018]

பிரபல நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு துபாயில் மரணம் அடைந்த நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மணி நேரங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தடயவியல் அறிக்கையில் ஸ்ரீதேவி மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என்றும், அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் தற்போது ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையில் ஸ்ரீதேவியின் இறப்புக்கு காரணம் எதிர்பாராமல் ஏற்பட்ட மாரடைப்பு தான் காரணம் என்றும் தடயவியல் சோதனை அறிக்கையை உறுதி செய்யும் வகையில் உள்ளது. மேலும் அவரது உடலில் சிறிய அளவில் ஆல்கஹால் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை ஆகியவற்றை அடுத்து இன்னும் ஒருசில மணி நேரத்தில் ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல் கட்சியின் கொடி திடீர் மாற்றமா?

சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை ஆரம்பித்த கமல் அறிமுகம் செய்த கட்சியின் கொடி தமிழர் பாசறை கொடியில் உள்ள சின்னத்தை போன்று இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

விஷாலுக்கு கலிபோர்னியாவில் நடக்கும் சிகிச்சை என்ன?

நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிப்பு பணிகள் காரணமாக பிசியாக இருந்த நடிகர் விஷால், சில நாட்கள் ஓய்வுக்கு செல்வதாகவும்,

ஸ்ரீதேவி மரணம் குறித்து தடயவியல் சோதனை அறிக்கை கூறுவது என்ன?

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு என்ன காரணம் என்பதை மருத்துவரீதியில் கண்டுபிடிக்க துபாயில் தடயவியல் சோதனை நடத்தப்பட்டது.

என்னை அரசியலுக்கு வந்தே ஆகணும் என்று முதலில் சொன்னவர் இவர்தான்: கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அவரது அரசியல் முடிவுக்கு யார் காரணம் என்பதை கமல் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கூறியுள்ளார்.

ரஜினியை அடுத்து மும்பை செல்கிறார் கமல்ஹாசன்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இறுதியஞ்சலி செலுத்த நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை சென்றார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்