கல்யாணத்தில் டான்ஸ்… கடுப்பான மணப்பெண் திருமணத்தையே நிறுத்திய சம்பவம்!!!

  • IndiaGlitz, [Tuesday,December 15 2020]

 

உத்திரப்பிரேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் மணப்பெண் ஒருவர் தன்னுடைய கல்யாணத்தில் நடந்த ஒரு சிறு நிகழ்வால் திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார். பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் கண்ணாஜ் பகுதியைச் சேர்ந்த மணப்பெண் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக கடந்த வெள்ளிக் கிழமை அன்று நடந்த நிகழ்ச்சியில் உறவினர்கள் எல்லாம் ஒன்றுகூடி டான்ஸ், பாட்டு என கோலாகலமாகக் கொண்டாடி இருக்கின்றனர்.

அந்நிகழ்வின்போது மணமகனின் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து மணமகளை டான்ஸ் ஆடும் மேடைக்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்று இருக்கின்றனர். இதனால் கடுப்பான மணப்பெண் திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார். காரணம் நண்பர்களின் செயலைக் கண்டிக்க முடியாத கணவன் தன்னை எப்படி பார்த்துக் கொள்வார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் உறவினர்கள் அனைவரும் சோகத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.

மேலும் அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்தையில் இச்சம்பவம் பூதாகரமாகி வரதட்சணை வழக்காக மாறி இருக்கிறது. இதனால் நடந்த பேச்சுவார்த்தையில் மணமகன் வீட்டார் பெண் வீட்டாருக்கு ஏற்பட்ட செலவீனங்களைச் சரிப்படுத்த 6.5 லட்சம் கொடுக்கவும் ஒப்புக் கொண்டனர். பின்னர் மீண்டும் திருமணத்தை நடத்த பெரியவர்கள் மேற்கொண்ட முயற்சியும் வீணாகி இறுதியில் திருமணமே நின்றுபோனது.

More News

ரஜினி கட்சியின் பெயர் இதுதானா? தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மாஸ் சின்னம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் 31-ஆம் தேதி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அறிவிக்க உள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் ஜனவரி மாதம் அவர் கட்சி தொடங்கி வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டமன்ற

போட்டியாளர் ஒருவருக்கு ஸ்பெஷல் பவர்: அர்ச்சனா தப்பிச்சுடுவாரா?

பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் புதிய டாஸ்க்கில் போட்டியாளர் கோழி மற்றும் நரியாக மாறுகின்றனர். இந்த டாஸ்க்கின் படி கோழிகள் தங்களுடைய தங்க முட்டைகளை

நள்ளிரவில் கைதான நடிகை சித்ரா கணவர்: தற்கொலைக்கான காரணம் கண்டுபிடிப்பு?

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட நிலையில் இந்த வழக்கில் அவரது கணவர் ஹேமந்த் நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் விட்டால் ரத்து செய்யப்படுமா??? எச்சரிக்கை அறிவிப்பு!!!

கொரோனாவுக்கு இடையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தியது

தீக்குளிக்க முயன்றவரை தைரியமாக காப்பாற்றிய பெண் காவலர்கள்: வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!

சாலையில் ஒரு விபத்து நடந்தாலோ அல்லது தற்கொலை முயற்சியில் ஒருவர் ஈடுபடும்போதோ சுற்றி நிற்பவர்கள் வேடிக்கை பார்ப்பதும், மொபைல் போனில் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில்