ஐபிஎல் 2018: ப்ரித்தி ஜிந்தா கனவை நிறைவேற்றுவாரா அஸ்வின்?

  • IndiaGlitz, [Saturday,March 31 2018]

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் திருவிழா இந்த ஆண்டு நெருங்கிவிட்டதை அடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்ளும் எட்டு அணியும் போட்டியை எதிர்நோக்க தயாராகி வருகின்றது. இந்த நிலையில் இன்று நாம் தமிழக வீரர் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி குறித்து பார்ப்போம்

பஞ்சாப் அணி கடந்த 2008ஆம் ஆண்டு அரையிறுதி வரையிலும், 2014ஆம் ஆண்டு இறுதி போட்டி வரையிலும் தகுதி பெற்ற அணி. 2014 இறுதி போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நூலிழையில் கோப்பையை தவறவிட்டது. இந்த நிலையில் புதிய கேப்டன் அஸ்வின் தலைமையில் இந்த ஆண்டு களமிறங்கும் பஞ்சாப் அணி கோப்பையை வெல்லுமா?

பேட்ஸ்மேன்களை பொருத்தவரையில் அஸ்வினுக்கு கைகொடுக்கும் வகையில் கிறிஸ் கெயில், ஆரோன் ஃபின்ச், ராஹுல் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் உள்ளனர். அதேபோல் யுவராஜ்சிங், ஸ்டோனிஸ், அக்சார் பட்டேல் ஆகிய ஆல்ரவுண்டர்கள் அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளனர்.

மேலும் பந்துவீச்சில் அஸ்வின், அன்கிட் ராஜ்புத், மொஹித் சர்மா மற்றும் முஜீப் ஜாத்ரான் ஆகியோர் உள்ளனர். 31 வயது அஸ்வின், 36 வயது யுவராஜ் சிங், 38 வயது கிரிஸ்கெயில் ஆகியோர் தங்களுடைய அனுபவத்தை பயன்படுத்தி அணியின் உரிமையாளர் ப்ரித்திஜிந்தா கையில் கோப்பையை வென்று அளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

மீண்டும் மெரினாவில் போராட்டமா?

ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரீனாவில் நடந்த இளைஞர்களின் போராட்டம் உலகமே வியக்க்கும் வகையில் நடந்தது. அனேகமாக தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே போராட்டம் என்று இதனை கூறலாம்.

கால்கள் இழந்த காதலனை கைப்பிடித்த காதலி: இதுவல்லவோ உண்மை காதல்

காதலுக்கு கண்ணில்லை என்றும், காதல் உடல் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது என்றும் சினிமாவில் தான் வசனம் பேசமுடியும், நடைமுறை வாழ்க்கைக்கு அது ஒத்துவராது என்று பலர் கூறுவதுண்டு

மனைவி அடிக்க ஆரம்பித்துவிட்டால் கணவரால் எதுவும் செய்ய முடியாது: ஷிகர்தவான்

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷிகர்தவான் மிகச்சிறந்த ஒப்பனிங் பேட்ஸ்மேன் என்பது தெரிந்ததே. ஆனால் அவர் பவுலிங் போட்ட பந்தை ஒரு பெண் வெளுத்து வாங்கியுள்ளார்.

பிறமொழி படங்களுக்கும் செக் வைப்பாரா விஷால்?

தமிழ் திரையுலகில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒற்றுமையுடன் கடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தம் நடந்து வருகிறது

சிவகார்த்திகேயன் கொடுத்த இரண்டு உறுதிமொழிகள்

இனிமேல் தனது படங்களில் டாஸ்மாக் காட்சிகள் இருக்காது என்று சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார்.