மனைவியுடன் ஒரு மணி நேரம் போனில் பேசிய கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை!

  • IndiaGlitz, [Monday,December 23 2019]

அகமதாபாத் சென்ற மனைவியுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனில் பேசிய கணவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தக்கலை என்ற பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த லூலு கிருஷ்ணா என்பவர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்க்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்யா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த சில நாட்களில் ஆர்யா மேற்படிப்பிற்காக அகமதாபாத் சென்றார். இதனை அடுத்து லூலு கிருஷ்ணா தனியே வசித்து வந்தார். இருப்பினும் கணவன், மனைவி இருவர்fஉம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று மனைவியிடம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனில் பேசிய லூலு கிருஷ்ணா திடீரென தனது அறைக்குள் சென்று தூக்கில் தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்தஅவரது குடும்பத்தினர் கதவை உடைத்து லூலு கிருஷ்ணா காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்து விட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக லூலு கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லூலு கிருஷ்ணா மரணம் குறித்து அவரது மனைவிக்கும் தகவல் சொல்லப்பட்டது. இருவரும் நீண்ட நேரம் என்ன பேசினார்கள்? எதனால் லூலு கிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

பிகினி உடை, பீச் ஊஞ்சல்:வைரலாகும் காஜல் சகோதரிகளின் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் காஜல்அகர்வால். இவர் அஜித்துடன் 'விவேகம்' விஜய்யுடன் 'ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் 'மாற்றான்' மற்றும்

பாடகியாக மாறிய அஜித் மகள்! வைரலாகும் வீடியோ

தல அஜித் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் ஆகிய இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்ததே. அஜித்தின் மனைவி ஷாலினி திருமணத்திற்கு

அரவிந்தசாமியின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!

'துருவங்கள் பதினாறு' என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகையே திரும்ப வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். ரகுமான் நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை

டைம் வேஸ்ட், இவர்களையெல்லாம் திருத்தவே முடியாது: பிரபல நடிகர் குறித்து சின்மயி

இது போன்ற நபர்களை திருத்தவே முடியாது, இவர்களை திருத்த முயற்சித்தால் நமக்கு தான் டைம் வேஸ்ட், எனவே அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும் என பிரபல நடிகர் குறித்து பாடகி சின்மயி

வீட்டுக்கு வா என அழைத்த காதலன்; நம்பி போன காதலிக்கு ஏற்பட்ட விபரீதம்!

வீட்டுக்கு வா என அழைத்த காதலனின் வீட்டிற்கு அவருடைய வார்த்தையை நம்பி போனால் 20 வயதுப் பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது