நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. ரோகிணி புகாரால் டாக்டர் காந்தாராஜ் எடுத்த அதிரடி முடிவு..!

  • IndiaGlitz, [Thursday,September 19 2024]

நடிகைகள் குறித்து யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் டாக்டர் காந்தராஜ் பேசிய நிலையில் அவர் மீது நடிகை ரோகினி புகார் அளித்த நிலையில் தற்போது டாக்டர் காந்தா ராஜ் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

அதாவது நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய டாக்டர் காந்தராஜ் தற்போது தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார், நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. எனினும், இந்தப் பேட்டிக்காக வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, “தனியார் தொலைக்காட்சியில் திரைப்பட நடிகைகள் குறித்து நான் அளித்த பேட்டி, பல நடிகைகளின் மனதைப் புண்படுத்தி உள்ளது என்பதைப் புரிந்து கொண்டேன். எனது நோக்கம் யாரையும் காயப்படுத்துவதல்ல. எனினும், இந்தச் சம்பவத்திற்காக நான் மனமார மன்னிப்பு கேட்கிறேன்,” என்றார்.

முன்னதாக, நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், “செப்டம்பர் 7-ம் தேதி, ஒரு யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், டாக்டர் காந்தராஜ், அனைத்து நடிகைகளையும் கீழ்த்தரமாகவும் அவதூறாகவும் பேசியுள்ளார். அவர் பேசிய விதம் நடிகைகளை கொச்சைப்படுத்தியது மட்டுமின்றி, அனைவரையும் பாலியல் தொழிலாளர்கள் என கூறியுள்ளார். ஆதாரமற்ற மற்றும் நாகரிகமற்ற வார்த்தைகளால் இழிவுபடுத்தியுள்ளார், எனக் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

இந்த வாரம் ஓடிடியில் 6 தமிழ் படங்கள்.. சினிமா ரசிகர்களுக்கு குஷி..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்கில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நிலையில், திரையரங்கில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது

ஒரே வருடத்தில் ரூ.50 கோடி சம்பளம் வாங்கினாரா ஏஆர் முருகதாஸ்.. ஆச்சரிய தகவல்..!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், கடந்த நான்கு ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்காமல் இருந்த நிலையில், தற்போது அவர் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்

தனுஷ் விவகாரத்தில் தலையிடும் பெப்சி.. நடிகர் சங்கம் கண்டனம்..!

நடிகர் தனுஷ் விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க ஃபெப்சி வலியுறுத்தியுள்ளதாக செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்ட

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்திய வழக்கு: தமிழ் இயக்குனர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை..!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் உள்பட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை.. மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்த பிரபல நடிகை..!

மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது உண்மை என ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறைகளில்