close
Choose your channels

சமந்தாவை அடுத்து சிக்கிய நயன்தாரா... கொந்தளித்த டாக்டரால் பரபரப்பு..!

Monday, July 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் நெபுலைசர் என்ற மருத்துவ சிகிச்சை தனக்கு மிகவும் பயன்பட்டதாக கூறி ஒரு நீண்ட விளக்கமும் அளித்து இருந்தார். இந்த பதிவுக்கு ஐடியில் உள்ள மருத்துவர் ஆபி பிலிப்ஸ் என்பவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

சமந்தா போன்ற பிரபலங்கள் இது மாதிரி தவறான சிகிச்சையை பதிவு செய்தால் அதனால் ஏற்படும் உயிருள்ளப்பிற்கு யார் பொறுப்பு ஏற்பது என்றும் கூறியிருந்தார். மேலும் தவறான சிகிச்சையை பரிந்துரை செய்த சமந்தாவை சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சமந்தாவை அடுத்து நயன்தாரா கூறிய ஒரு கருத்துக்கும் அதே மருத்துவர் ஆபி பிலிப்ஸ் கொந்தளித்து கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை நயன்தாரா செம்பருத்தி டீ குடித்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மருத்துவர் ஆபி பிலிப்ஸ், ‘செம்பருத்தி டீ குடித்தால் உடலுக்கு நல்லது என்று மட்டும் சொன்னால் போதும், சர்க்கரை நோயை குணப்படுத்தும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் என்று கூறுவதற்கு நயன்தாரா யார்? அவர் என்ன டாக்டரா? என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment