சமந்தாவை அடுத்து சிக்கிய நயன்தாரா... கொந்தளித்த டாக்டரால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Monday,July 29 2024]

நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் நெபுலைசர் என்ற மருத்துவ சிகிச்சை தனக்கு மிகவும் பயன்பட்டதாக கூறி ஒரு நீண்ட விளக்கமும் அளித்து இருந்தார். இந்த பதிவுக்கு ஐடியில் உள்ள மருத்துவர் ஆபி பிலிப்ஸ் என்பவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

சமந்தா போன்ற பிரபலங்கள் இது மாதிரி தவறான சிகிச்சையை பதிவு செய்தால் அதனால் ஏற்படும் உயிருள்ளப்பிற்கு யார் பொறுப்பு ஏற்பது என்றும் கூறியிருந்தார். மேலும் தவறான சிகிச்சையை பரிந்துரை செய்த சமந்தாவை சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சமந்தாவை அடுத்து நயன்தாரா கூறிய ஒரு கருத்துக்கும் அதே மருத்துவர் ஆபி பிலிப்ஸ் கொந்தளித்து கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை நயன்தாரா செம்பருத்தி டீ குடித்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மருத்துவர் ஆபி பிலிப்ஸ், ‘செம்பருத்தி டீ குடித்தால் உடலுக்கு நல்லது என்று மட்டும் சொன்னால் போதும், சர்க்கரை நோயை குணப்படுத்தும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் என்று கூறுவதற்கு நயன்தாரா யார்? அவர் என்ன டாக்டரா? என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

More News

இதை எதிர்பார்க்கவே இல்லை.. யாஷிகாவின் காஸ்ட்யூம் மாற்றத்திற்கு குவியும் கமெண்ட்..!

நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக கிளாமர்  காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வந்த நிலையில்

பணத்தை ஈர்க்க எளிய வழிகள் - பிரபல மலையாள மாந்திரீகர் சந்திரகுமார்

பிரபல மலையாள மாந்திரீகர் சந்திரகுமார் அவர்கள், யூடியூப் சேனல் ஆன்மீக கிளிக்ஸில் அளித்த பேட்டியில், மாந்திரீகம், வாராகி அம்மன் வழிபாடு, பில்லி, சூனியம்

அடுத்த லெவலுக்கு சென்றது 'தக்லைஃப்' திரைப்படம்.. ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட வீடியோ..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம்

யுவன்ஷங்கர் ராஜா பெயரை மிஸ்யூஸ் செய்தாரா நடிகர் ரியோ ராஜ்? வைரல் வீடியோ..!

யுவன் சார்  தான் சொன்னார் என்று நடிகர் ரியோ ராஜ் அவரது பெயரை மிஸ்யூஸ் செய்ததாக வெளியாகி உள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷின் 'ராயன்' 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா? நன்றி தெரிவித்த தனுஷ்..!

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மிகப்பெரிய வசூல் கொடுத்துள்ள நிலையில் தனுஷ் ஆனது சமூக வலைதளம் மூலம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.