சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்.. ஆனாலும் நீங்க செய்தது தப்புதான்..!

  • IndiaGlitz, [Sunday,July 07 2024]

சமீபத்தில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவ குறிப்பு ஒன்று கூறியதை அடுத்து டாக்டர் ஒருவர் சமந்தாவை சிறையில் அடைக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த டாக்டர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா அவ்வப்போது மருத்துவம், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் அவர் ஹைட்ரஜன் பெராக்ஸைடை பயன்படுத்தி சுவாசித்ததால் சில பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்றும் தேவை இல்லாமல் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

சமந்தாவின் இந்த பதிவுக்கு பெரும் எதிர்ப்புகள் இருந்தது என்பதும் குறிப்பாக டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் சமந்தாவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். சமந்தா கூறியதை யாரும் அதை செய்ய வேண்டாம் , ஹைட்ரஜன் பெராக்ஸைடை நெபுலைசரில் சுவாசிப்பது ஆபத்தானது என்றும் சமந்தாவுக்கு தண்டனம் தெரிவித்ததோடு அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த டாக்டர் மீண்டும் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். மருத்துவம் பற்றிய அறிவில்லாதவர் என்று சமந்தாவை குறிப்பிட்டு அவரை காயப்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல, சமந்தா எந்த தவறான உள்நோக்கத்துடனும் இதை செய்யவில்லை என்று எனக்கு தெரியும், ஆனாலும் இது போன்ற தவறான மருத்துவ முறைகளை கோடிக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் பிரபலம் செய்வதால் ஆபத்து இருக்கிறது என்றும் அந்த ஆபத்தை தடுக்கவே கடுமையாக பேசினேன். அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், ஆனாலும் சமந்தா செய்தது தவறு தான், இனிமேல் அந்த தவறை அவர் செய்யாமல் இருக்க வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

திருவள்ளுவர் மனைவி வாசுகி கேரக்டர்.. கடுமையாக விரதம் இருக்கும் நடிகை.!

உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் திருவள்ளுவர் மனைவியாக நடிக்கும் நடிகை

தமிழ் நடிகை தான் ஹீரோயின்.. ஷாருக்கான் செய்த பரிந்துரை.. விட்டதை பிடித்துவிட்டாரா?

ஷாருக்கான் தனது முந்தைய படத்தின் நாயகியாக தமிழ் நடிகையை பரிந்துரை செய்த நிலையில் அப்போது அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் தற்போது ஷாருக்கான் நடிக்க இருக்கும்

பிரபாஸ் அடுத்த படத்தில் தென்கொரிய வில்லன்.. சீன, கொரிய மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டம்.!

பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தின் வசூல் ரூ.800 கோடியை தாண்டி ரூ.1000 கோடி என்ற இலக்கை

சிம்புவின் 'எஸ்.டி.ஆர். 48' படத்தை கைவிட்டதா ராஜ்கமல்? தனுஷ் பட தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை?

சிம்பு நடிப்பில், கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் '

தவெக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் திரைப்பட ஹீரோ.. விஜய் கட்சியில் இணைகிறாரா?

சமீபத்தில் சென்னையில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட ஹீரோ கலந்து கொண்டதை அடுத்து அவர் விஜய் கட்சியில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.