வடபழனி கோவில் முழு வரலாறு தெரியுமா..? | வேல்மாறல் மந்திரத்தின் அதிசியம் | ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார்

  • IndiaGlitz, [Wednesday,May 29 2024]

சென்னையை அடுத்த வடபழனி முருகன் கோவிலின் மகிமை பற்றியும், அங்கு சென்று முருகனை தரிசித்தால் கிடைக்கும் பலன்கள் பற்றியும், ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார் ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

பழனிக்கு இணையான வடபழனி!

பழனி முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்தால் கிடைக்கும் அனைத்து பலன்களும், வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்தாலும் கிடைக்கும் என்கிறார் விஜயகுமார். பழனியில் செய்யப்படும் அபிஷேகங்கள் அனைத்தும் வடபழனி முருகன் கோவிலிலும் செய்யப்படுகிறது. அவ்வாறு செய்தால் அதே பலன்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

வடபழனி ஆலயம் தோன்ற காரணம்!

வடபழனி முருகன் கோவில் உருவாக காரணமாக இருந்தவர் ஸ்வாமி கிருபானந்த வாரியார் என்பதையும் இந்த வீடியோ விளக்குகிறது. ஆறுபடை கடவுளான முருகனை தரிசிக்க எல்லோருாலும் முடியாது. ஆனால், பழனிக்கு சென்று முருகனை தரிசித்தால் ஆறுபடை முருகன் வீடுகளுக்கு சென்றதற்கு சமமான பலன் கிடைக்கும் என்கிறார் அருணகிரிநாதர். அதே பலனை வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று பெற முடியும் என்கிறார் விஜயகுமார்.

வடபழனி கோவில் வரலாறு

வடபழனி முருகன் கோவிலின் வரலாற்றை பற்றியும் இந்த வீடியோ விளக்குகிறது. சென்னையில் வாழ்ந்த அண்ணாசாமி தம்பிரான் என்பவர் கனவில் முருகன் காட்சி தந்து, வடபழனியில் தனக்கு கோவில் கட்ட வேண்டும் என்று கேட்டதாகவும், அதன் பின்னர் அவர் வடபழனி முருகன் கோவிலை கட்டியதாகவும் விஜயகுமார் விவரிக்கிறார்.

திருமண பிரச்சனை தீர்வுக்கு வழி!

வடபழனி முருகன் கோவிலின் சிறப்புகள் பற்றியும் இந்த வீடியோ பேசுகிறது. திருமண தடை இருப்பவர்கள், வடபழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, திருப்புகழை பாடி ஆறு விளக்கு ஏற்றி வணங்கினால், விரைவில் திருமண தடை நீங்கி திருமணம் கைகூடும் என்கிறார் விஜயகுமார்.

வடபழனி வேல் மாறல் அதிசயம்!

வடபழனி முருகன் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தியின் அழகை விவரிப்பதுடன், அங்கு அமர்ந்து வேல் மாறல் மந்திரத்தை ஜபித்தால் நடக்கும் அதிசயங்கள் பற்றியும் இந்த வீடியோ விளக்குகிறது. மேலும், பழനി மலை முருகன் கோவிலில் மௌன சாமிகள் செய்த அதிசயம், 48 நாட்கள் வேல் மாறல் படித்ததால் நடந்த அற்புதம் போன்றவற்றையும் விஜயகுமார் பகிர்ந்து கொள்கிறார்.

சாதுக்களால் உருவாக்கப்பட்ட வடபழனி கோவில்!

வடபழனி முருகன் கோவில் சாதுக்களால் உருவாக்கப்பட்டது என்பதையும் இந்த வீடியோ சுட்டிக்காட்டுகிறது.