அக்னி நட்சத்திரம் பிறந்த கதை தெரியுமா? கேளுங்கள் ஆடியோ வடிவில்!

  • IndiaGlitz, [Tuesday,May 04 2021]

தமிழர்கள் தங்களைச் சுற்றியுள்ள இயற்கை, தட்பவெட்ப நிலையையும் அதன் மாற்றங்களையும் கூட புனித தேவதைகளாகத்தான் புரிந்து கொள்கின்றனர். அந்த அடிப்படையில்தான் அக்னி தேவன் எனும் ஒரு இயற்கை தெய்வமும் ஆதிகாலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. இந்த அக்னி தேவன் ஒரு நட்சத்திரமாகக் கருதப்பட்டாலும் சோதிடத்தில் சொல்லப்படும் 27 நட்சத்திரங்களில் ஒன்றாக இடம்பெறுவது இல்லை.

இதனால் சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் 4 ஆம் பாதத்தில் தொடங்கி ரோகிணி முதல் பாதம் வரை சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை சோதிடர்கள் அக்னி நட்சத்திரக் காலம் எனப் பஞ்சாங்கத்தில் கணித்து உள்ளனர். அந்த அடிப்படையில் வானியலும் சோதிடமும் கூறும் அக்னி நட்சத்திரக் காலக்கட்டம் இந்த ஆண்டு (2021) இன்று (மே 4) மே 28 ஆம் தேதி வரை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதை தெய்வம்தான் இந்த அக்னி பகவான். கார்த்திகை என்பது நெருப்பை தாங்கும் சக்திக் கொண்டது. சோதிட நூல்களும் அப்படித்தான் சொல்கின்றன. அந்த அடிப்படையில் எரிப்பை உமிழும் தன்மைக் கொண்ட அக்னி பகவான் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கோடைக் காலத்தில் வந்து விடுகிறான். இந்தக் காலக்கட்டத்தில் பெருந்தொற்று நோய்களும் மக்களை தாக்குகின்றன.

பொதுவா அக்னி காலக்கட்டங்களில் விலங்கு மற்றும் மனிதர்களுக்கு அம்மை நோய்கள் ஏற்பட்டு பெரிய பாதிப்பை கொடுத்து விடும். ஆனால் இந்த 2021 ஆம் ஆண்டில் பெருந்தொற்றுக்கு பஞ்சமே இல்லை எனும் அளவிற்கு கொரோனா நோய்த்தொற்று தீவிரம் அடைந்து இருக்கிறது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்பதும் அதன் நெருப்பு தன்மையும் ஏன் இவ்வளவு வீரியம் பெற்றவையாக இருக்கின்றன? அக்னி என்ற தெய்வம் எப்படி தோன்றியது? இந்தக் காலக்கட்டத்தை எப்படி கடப்பது என்பது போன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்து பிரத்யேக ஆடியோ vaata ஆப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆடியோ அக்னி தேவனைப் புரிந்து கொள்வதற்கு துணையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

முதல் தலைமுறை வாக்காளர்கள் யாரை நம்புகிறார்கள்? விளக்கும் பிரத்யேக வீடியோ!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

தமிழகத்தின் 3 ஆவது பெரிய தலைவராக சீமானை கருத முடியுமா? பரபரப்பு வீடியோ!

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்க இருக்கிறது

சட்டமன்றத்தில் ஒலிக்க இருக்கும் தியேட்டர் உரிமையாளரின் குரல்! பிரச்சனைகள் தீருமா?

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தியேட்டர் உரிமையாளரின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தேன் போல இனித்திடும் வாக்குறுதி: ஸ்டாலினுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது என்பதும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்

12 மணி வரை மட்டுமே காய்கறி கடை: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நேற்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கி