எங்களையும் இந்தி படங்களை பார்க்க வைத்து விடுவார்களோ? கனிமொழி எம்பி

  • IndiaGlitz, [Wednesday,January 08 2020]

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அங்கு மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மர்ம நபர்கள் சிலர் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் நேரில் சென்று தாக்குதலுக்கு ஆளான மாணவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று திமுக எம்பி கனிமொழி அவர்கள் காயமடைந்த மாணவ மாணவிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, மாணவர்களின் போராட்டத்துக்கு திமுக எப்போதும் ஆதரவாக இருக்கும் என்று கூறினார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் அவர் பேட்டி அளித்த போது ’மாணவர்களுக்கு ஆதரவாக போராடிய நடிகை தீபிகா படுகோனே’ நடித்த ‘சப்பக்’ என்ற திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு சிலர் கூறி வருவது குறித்து கேள்விக்கு பதில் கூறிய கனிமொழி ’நாங்கள் எப்போதும் இந்தி திரைப்படங்களை பார்ப்பதில்லை ஆனால் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக எங்களையும் ஹிந்தி படங்களை பார்க்க வைத்து விடுவார்கள் போல் தெரிகிறது’ என்று கூறினார்.
 

More News

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'நான் சிரித்தால்' சென்சார் தகவல்!

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' மற்றும் 'நட்பே துணை' ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்து வெற்றி படமானது என்பது தெரிந்ததே 

என்னைப் பற்றி பேசுங்கள்.. குடும்பத்தை இழுக்காதீர்கள்..! ரோஹித் ஷர்மா.

என்னைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் என் குடும்பத்தை இதில் இழுக்காதீர்கள். எனது குடும்பத்தினர் வேறு எதையும் பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டாததால் அவர்களை இதில் இழுக்க வேண்டாம்.

என்னைப் பற்றி பேசுங்கள்.. குடும்பத்தை இழுக்காதீர்கள்..! ரோஹித் ஷர்மா.

என்னைப் பற்றிப் பேசுங்கள். ஆனால் என் குடும்பத்தை இதில் இழுக்காதீர்கள். எனது குடும்பத்தினர் வேறு எதையும் பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டாததால் அவர்களை இதில் இழுக்க வேண்டாம்.

உங்கள் ஃபேஸ்புக் கணக்கு இன்னும் பாதுகாப்பாக போகிறது..வருகிறது புதிய அப்டேட்.

2014ல் ஃபேஸ்புக் பயனாளர்களுக்கான பிரைவஸி அமைப்புகள் (Privacy Checkup tool) அறிமுகப்படுத்தப்பட்டன. இதை இன்னும் மேம்படுத்திய வெர்ஷன் தற்போதுவெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கின்றது: பிரபல நடிகை

இந்தியாவை நினைத்தால் தனக்கு பயமாக இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது