close
Choose your channels

விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை!

Wednesday, October 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதன் பின்னர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக இருவரும் குணமாகி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்

இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் விஜயகாந்த் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியைப் பார்த்தோம். இதனை அடுத்து அவருடைய உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளத்தின் பரவி வருவதால் தேமுதிக தலைமைக் கழகம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். கேப்டனின் உடல்நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’

இவ்வாறு தேமுதிக தலைமை கழக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment