விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை!

  • IndiaGlitz, [Wednesday,October 07 2020]

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதன் பின்னர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக இருவரும் குணமாகி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்

இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் விஜயகாந்த் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியைப் பார்த்தோம். இதனை அடுத்து அவருடைய உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளத்தின் பரவி வருவதால் தேமுதிக தலைமைக் கழகம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். கேப்டனின் உடல்நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’

இவ்வாறு தேமுதிக தலைமை கழக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

கொல்கத்தாவுக்கு அக்னிப் பரீட்சை! 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: தொண்டர்கள் அதிர்ச்சி

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு

சாலையின் நடுவே தூக்கிலிடுங்கள்… உறுப்பை ஊனமாக்குங்கள்… ஹத்ராஸ் சம்பவம் குறித்து நடிகை மதுபாலா காட்டம்!!!

தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த பிரபல நடிகை மதுபாலா ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து காட்டமான கருத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

72 வயதில் முதுகலைத் தேர்வு எழுதிய எம்.எல்.ஏ… வைரலாகும் தகவல்!!!

ஹரியாணாவைச் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ ஒருவர் ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது முதுகலை பட்டத்திற்கான

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவிக்கு கத்திக்குத்து: மடக்கி பிடித்த பொதுமக்கள்!

குடும்ப சண்டை காரணமாக கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது