விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்க பணம் கட்டி டோக்கன் வாங்கும் தொண்டர்கள்

  • IndiaGlitz, [Tuesday,February 28 2017]

பிரபல நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகின்றார். இந்நிலையில் அவருடன் புகைப்படம் எடுக்க தொண்டர்கள் வரிசையில் நின்று பணம் கட்டி டோக்கன் பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இன்று விழுப்புரத்தில் நடந்த தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்க தொண்டர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். கூட்டம் அதிகமானதால் அவர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டதோடு டோக்கனும் வழங்கப்பட்டது. இந்த டோக்கனுக்கு பணமும் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட விஜயகாந்த் டெபாசிட்டை பறிகொடுத்து படுதோல்வி அடைந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

More News

பாலா-ஜோதிகா படத்தின் டைட்டில் அறிவிப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் பிரபல நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

திமுகவில் இணைந்தார் பிரபல நடிகர்

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகரும் முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளருமான ராதாரவி திமுகவில் இணைந்தார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்ட விழாவில் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'மருதநாயகம்' படத்தின் படப்பிடிப்பை கடந்த 1997ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்னையில் நடந்த விழா ஒன்றில் தொடங்கி வைத்தார்

டெல்லி பல்கலை மாணவிக்கு பதிலடி கொடுத்த சேவாக்

கார்கில் போரில் உயிர்நீத்த தியாகியின் மகளான டெல்லி பல்கலைக்கழக மாணவி கூர்மேகம் கெளர் என்பவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை என்றும் தனது தந்தையை கார்கில் போர்தான் கொன்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் தேசியவாதம் என்ற பெயரில் பா

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனுஷ் நேரில் ஆஜர்.

பிரபல நடிகர் தனுஷை தனது மகன் என்றும் சிறு வயதில் காணாமல் போனவர் என்றும் மதுரையை அடுத்த மேலூரை சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெறவிருப்பதால் நடிகர் தனுஷ் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்....