கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த பிரபல நடிகரின் மகள்

  • IndiaGlitz, [Thursday,July 19 2018]

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு நியூட்ரியனிஸ்ட் என்பதும் அவர் உலகப் புகழ் பெற்ற 'அக்சய பாத்திரம்' என்னும் தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக சேவை செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த தொண்டு நிறுவனம் ஏராளமான பள்ளி குழந்தைகளுக்கு சத்துள்ள மதிய உணவை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திவ்யா சமீபத்தில் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்துள்ளார். 'அக்சய பாத்திரம்' என்னும் தொண்டு நிறுவனம் மூலம் தற்போது பல பள்ளிகளுக்குக் மதிய உணவு வழங்கி வருவதாகவும், இதனையடுத்து அரசு பள்ளிகளிலும் சத்தான உணவு வழங்க தங்கள் தொண்டு நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டு கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து திவ்யா கூறியபோது, 'அனைத்து குழந்தைகளுக்கும் சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதே 'அக்சய பாத்திரம்' நிறுவனத்தின் குறிக்கோள் என்றும், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் பெரும்பாலானோர் சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைக்காமல் உள்ளதாகவும், அதுகுறித்து அமைச்சரிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.

More News

பகலில் ஆசிரியர், இரவில் டான்: ரஜினிக்கு மீண்டும் ஒரு 'நான் சிகப்பு மனிதன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.

கொடூரமாக கொலை செய்தால்கூட பத்தாது: சிறுமியை சீரழித்தவர்கள் குறித்து விஜய்சேதுபதி

சென்னையில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் 11 வயது சிறுமியை 22 பேர் கொடூரமாக பல மாதங்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடுமையை கண்டு தமிழகமே கொதித்து எழுந்துள்ளது

ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்குக் கார்த்தி அதிரடி பதில்

நடிகர் கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் தமிழகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்ல கார்த்தி

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

பிரபுதேவாவின் முதல் போலீஸ் பட டைட்டிலில் போலீஸ் அதிகாரி

பிரபுதேவா முதன்முதலாக போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாமலேயே நடந்து வந்தது.