தளபதி விஜய்யின் அடுத்த படம்: உறுதி செய்த பிரபல இயக்குனர்!

  • IndiaGlitz, [Sunday,May 30 2021]

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் சென்னையில் நடைபெறும் என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தளபதி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் கசிந்து வருகிறது. விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாகவும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் தமிழ் தெலுங்கு உள்பட ஒரு பான்-இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குனர் வம்சி பைடிபல்லி, விஜய் படத்தை இயக்குவதை உறுதி செய்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கோவிட் நிலைமை முடிவுக்கு வந்தபின் வெளியாகும் என்றும் இது தனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் உள்ள மற்ற விவரங்கள் அனைத்தும் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் தளபதி விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் நடிக்கும் 3 ஹீரோயின்கள் யார் யார்?

சிம்பு நடித்து வரும் 'மாநாடு' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

நடிகையாக்குவதாக கூறி பாலியல் சீண்டல்: PBSS பள்ளி மாணவிகள் பகீர் வாக்குமூலம்

சினிமாவில் நடிகையாக்குவதாக கூறி பாலியல் சீண்டல் செய்ததாக பள்ளி மாணவிகள் PBSS பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றஞ்சாட்டி வாக்குமூலம் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கொரோனா பாதிக்கப்பட்ட செய்தியாளர் உயிரிழப்பு....!

திருவாரூரில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த, செந்தில்குமார் கொரோனா தொற்றால் காலமானார்.

"தேனிலவே இன்னும் முடியல, அதுக்குள்ளே"....! சர்ச்சை நாயகன் செல்லூர் ராஜா பேச்சு....!

"திமுக-வின் ஆட்சியில் இன்னும் தேனிலவே முடியல, ஆனால் அதுக்குள்ளே ரவுடிசம் தொடங்கியாச்சு" என்ற  செல்லூர் ராஜாவின் பேச்சு புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரபல இயக்குனர் குடும்பத்தினர் 14 பேர்களுக்கு கொரோனா: மன உளைச்சலில் தவித்ததாக டுவிட்!

பிரபல இயக்குனர் ஒருவரின் குடும்பத்தினரை சேர்ந்த 14 பேர்களுக்கும் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த 20 நாட்களாக தான் மன உளைச்சலில் இருந்ததாக