எனக்கும் ஒரு நாள் ஆஸ்கார் கிடைக்கும்: விக்னேஷ் சிவன்

  • IndiaGlitz, [Monday,February 25 2019]


2019ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. 'கிரீன் புக்', ‘ரோமா', 'பிளாக் பாந்தர்' ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கார் விருதினை அள்ளின. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் தளத்தில் தனக்கும் ஒருநாள் ஆஸ்கார் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்கார் கதவருகே விக்னேஷ் சிவன் நிற்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள அவர், 'ஒருநாள் கதவு திறக்கும், அருகில் இருப்பதே நமது வேலை' என்று கூறியுள்ளார். மேலும் இவ்வருடம் ஆஸ்கார் விருது பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் இந்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பிரிவு அல்லது பாடலாசிரியர் பிரிவுக்கு உங்களுக்கு ஆஸ்கார் கிடைக்கும் என வாழ்த்து தெரிவித்துள்ளார் ஒரு நெட்டிசன். ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து மீண்டும் ஒரு தமிழர் ஆஸ்கார் விருது வாங்கும் நாள் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.