இந்த மாதிரி ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை.. 'எல்.ஐ.சி' நடிகர் குறித்து விக்னேஷ் சிவன்..!

  • IndiaGlitz, [Sunday,February 11 2024]

இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது ’எல்ஐசி’ என்ற ’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிப்பு அரக்கன் குறித்து தனது சமூக வலைதளத்தில் ’இந்த மாதிரி ஒரு நபரை நான் இதுவரை பார்த்ததே இல்லை’ என்று பதிவு செய்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’எல்ஐசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. கோவை, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், இந்த படப்பிடிப்பில் பிரதீப் ரங்கநாதன். எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இந்த படத்தில் சீமான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை விக்னேஷ் சிவன் இயக்கி வரும் நிலையில் அவருடைய நடிப்பு குறித்து தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். ’எஸ் ஜே சூர்யா என்னும் அற்புதமான நடிகருடன் படப்பிடிப்பில் இருந்தது எனக்கு மிகவும் நல்ல தருணம். அவருக்கு சினிமா மீதுள்ள காதல் மற்றும் அவரது சினிமா அறிவை பார்த்து வியந்தேன். இந்த நடிப்பு அரக்கனுடன் இனி எப்போதும் பணியாற்ற விரும்புகிறேன். அவரது ஆற்றல் மற்றும் திறமையான நடிப்பு, அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவை எனக்கும் சேர்த்து ஊக்கமளிக்கிறது.

நான் என்னுடைய திரையுலக அனுபவத்தில் நிறைய நடிகர்களை பார்த்திருக்கிறேன். நிறைய இயக்குனர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுடன் உரையாடி இருக்கிறேன். ஆனால் இந்த மனிதன் நான் இதுவரை கண்டதில் மிகவும் நேர்மையான மற்றும் திறமைசாலியானவர். உங்களுக்கு திரை உலகில் மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது, நீங்கள் உங்கள் கனவை தொடர்ந்து பயணம் செய்யுங்கள், நிச்சயமாக மிகப் பெரிய வெற்றி கிடைக்கும்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More News

ஹாட்ஸ்டாரின் அசத்தல் அறிவிப்பு..இதயத்தை வருடும் புதிய சீரிஸ்..!

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பல புதிய வெப் சீரிஸ் அவ்வப்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது ஒரு மருத்துவமனையின் பின்னணியில், இளமை துள்ளும்

இயக்குனர் கனவில் இருந்த 'அஞ்சாதே' நடிகர் திடீர் மரணம்.. என்ன ஆச்சு?

'அஞ்சாதே' படத்தில் நடித்த நடிகர் விரைவில் இயக்குனராக போகும் கனவில் இருந்த நிலையில் திடீரென அவர் மூச்சு திணறல் காரணமாக காலமாகிவிட்டார் என்ற தகவல் திரையுலகினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திரைக்கு வரும் முன்பே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற சிவகார்த்திகேயன் படம்..!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி வரும் 'கொட்டுக்காளி' என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில் ரிலீசுக்கு முன்பே இந்த படம் சர்வதேச

திடீரென போலீசில் புகார் அளித்த மகேஷ்பாபுவின் மனைவி: ஒரே மகளுக்கு என்ன பிரச்சனை?

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா ஹைதராபாத் காவல் துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இனி யூடியூப், சமூக வலைதளங்களுக்கும் தேசிய விருது: மத்திய அரசு அதிரடி திட்டம்..!

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி சிறப்பான யூடியூப் மற்றும் சமூக வலைதள பதிவுகளுக்கும் தேசிய விருதுகள் வழங்க  மத்திய அரசு