இப்போதைக்கு அப்டேட் கேட்காதீங்க.. காரணம் சொன்ன 'கோட்' இயக்குனர் வெங்கட் பிரபு..!

  • IndiaGlitz, [Monday,March 04 2024]

வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட் கேட்டு படக்குழுவினர்களை தொந்தரவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்போதைக்கு அப்டேட் கேட்க வேண்டாம் ஆனால் நீங்கள் எதிர்பாராத மாஸ் அப்டேட் விரைவில் வெளிவரும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘கோட்’ படத்திற்காக ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் உள்ள ஒரு குழுவிடம் கிராபிக்ஸ் பணிகளின் ஒரு பகுதியும் இந்தியாவில் உள்ள ஐந்தாறு நிறுவனங்களில் சில கிராபிக்ஸ் பணிகளையும் ஒதுக்கி உள்ளோம்.

எனவே இப்போதைக்கு அப்டேட் யாரும் தயவு செய்து கேட்க வேண்டாம், ஆனால் அதே நேரத்தில் ஒரு பண்டிகை திருவிழாவின் போது சாதாரண போஸ்டர் வெளியிடாமல் ஒரு பெரிய அப்டேட்டை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதுவரை காத்திருக்கவும்’ என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலம் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து ‘கோட்’ படத்தின் அப்டேட்டுகளை கேட்டு வரும் நிலையில் வெங்கட் பிரபு இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, கனிகா என ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

இயக்குனரும் வெளியேறி விட்டார்.. இனி 'குக் வித் கோமாளி' அவ்வளவு தானா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சிக்கு வேறு எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் பார்வையாளர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும்

வெட்கக்கேடு!  இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது.. பிரபல நடிகை ஆவேசம்..

வெட்கக்கேடு! இந்தியர்கள் தங்கள் வீட்டு பெண்களை நடத்துவது போல வெளிநாட்டவர்களை நடத்தி வரும் நிலையில் ஒரு சிலரால் இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது

பார்லரை வித்தத ஏன் சொல்லலை.. ரோகிணியிடம் முத்து கேட்காத கேள்வியை கேட்கும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் முத்து தனது நண்பர்களுக்காக காரை விற்ற நிலையில் அந்த காரை ஏன் விற்றாய் என ரோகிணி, மனோஜ், விஜயா என மாறி மாறி கேட்க முத்து திருப்பி

ஐஸ்கட்டி தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம்.. 'தெறி' நடிகையின் வைரல் வீடியோ..!

விஜய் நடித்த 'தெறி' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஐஸ் கட்டி தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள

வெள்ளம் நேரத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்த ரசிகர்களுக்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் அதன் பிறகு சில நாட்கள் கழித்து தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.