'சந்திரமுகி 2': வேட்டையன் மன்னன் கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’ திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகவுள்ள ’சந்திரமுகி 2’படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ’சந்திரமுகி 2’திரைப்படம் வேட்டையன் மன்னன் மற்றும் சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் கதை என்றும் இதில் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னன் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாகவும் இயக்குனர் பி.வாசு தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் முதல் பாகத்தில் நடித்த மனோதத்துவ டாக்டர் வேடத்திலேயே நடிப்பார் என தெரிகிறது. மேலும் சந்திரமுகி படத்தில் நடித்த முக்கிய நடிகைகளான ஜோதிகா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ’சந்திரமுகி 2’ படத்திலும் நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

துல்கர் சல்மான் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறும் தமிழ் நடிகர்?

சமீபத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்த 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் பிரபாகரன் குறித்து சர்ச்சைக்குரிய காட்சி இருந்ததாக பிரச்சனை எழும்பியதால்,

திரையரங்குகள் மூடியே இருக்கட்டும்: பிரபல இயக்குனரின் நீண்ட கட்டுரை

பிரபல இயக்குனர் தங்கர்பச்சான், இந்த கொரோனா காலத்தில் திரையுலகின் நிலைமையும், திரையரங்குகள் எதிர்காலத்தில் என்ன ஆகும் என்பது குறித்தும் ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். அந்த கட்டுரை இதுதான்:

மிகப்பெரிய பங்களா கட்டிய ஒரே மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர்!

கேரளாவிலேயே மிகப்பெரிய பங்களா கட்டிய தொழிலதிபர் ஒருவர் துபாயில் 14 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் இர்பான்கான்: வாழ்க்கைச் சித்திரம்!!!

“ஸ்லம்டாக் மில்லியனர்”, “லைஃப் ஆஃப் பை” மற்றும் “தி அமேசிங் ஸைபைடர் மேன்” உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் இர்பான்கான் 54 வயதில் நேற்று காலமானார்.

காய்கறி வாங்க சென்ற இளைஞர் மனைவியுடன் வந்ததால் அதிர்ச்சி அடைந்த அம்மா!

காய்கறி வாங்கி விட்டு வருகிறேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு மார்க்கெட் சென்ற இளைஞர் திரும்பி வரும்போது மனைவியுடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது