மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இல்லை.. இயக்குனர் தங்கர்பச்சான் வேதனை..!

  • IndiaGlitz, [Thursday,June 20 2024]

மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இல்லை என இயக்குனர் தங்கர்பச்சான் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:

கருணையிலா ஆட்சிக்கடிது ஒழிக!
- வள்ளலார் இராமலிங்க அடிகளார்

மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் இன்று கள்ளச்சாராயத்தால் பறிபோன நாற்பது உயிர்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் நாம் தமிழ்நாடு அரசு விற்கும் கொடிய மதுவினால் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இம்மக்கள் செத்து மடிவது குறித்து பேச மறுக்கின்றோம்!

நிர்வாக திறனின்றி ஆட்சி செய்து மக்களின் உயிர்பற்றி அக்கறை கொள்ளாமல் மடிய காரணமாக இருந்துவிட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்தே இழப்பீடு தரும் கொடுமைகளை எல்லாம் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சகித்துக் கொள்வது?

தாலியை இழந்து நிற்கும் இந்த குடும்பங்களின் பெண்களுக்கு இனி துணை யார்? தந்தையை இழந்து நிற்கும் இந்த பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு இனி பொறுப்பு ஏற்க போவது யார்? உழைக்கும் மக்களின் உடலில் உள்ள பலத்தை அழித்து மனித வளத்தை அழித்தொழித்து, அனைத்து குற்றங்களுக்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் மதுவை விற்காமல் இனியாவது ஆட்சி செய்யப் பாருங்கள். இப்படிப்பட்ட இழப்புகள் உங்கள் இல்லத்தில் ஏற்பட்டிருந்தால் தெரியும் அது என்ன மாதிரியான வலி என்பது?

 

More News

கவுதம் மேனனின் புதிய படைப்பில்  யோகி பாபு ? என்னவாக இருக்கும் ரசிகர்கள் ஆவல் ? !!

"வாரணம் ஆயிரம்", "காக்க காக்க", "மின்னலே", "விண்ணைத்தாண்டி வருவாயா", "வேட்டையாடு விளையாடு" போன்ற காலத்தால் அழியாத கிளாசிக் படைப்புகளைத் தந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ்

கள்ளச்சாராய மரணம்.. விஜய்யை அடுத்து 2026ல் அரசியலுக்கு வரும் இன்னொரு நடிகரின் கண்டனம்..!

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் குறித்து திரை உலகில் இருந்து முதல் குரல் கொடுத்தவர் தளபதி விஜய் என்பது தெரிந்தது. அந்த வகையில் தளபதி விஜய்

விஜய் மட்டும் தான் குரல் கொடுத்துள்ளார். மற்றவர்களுக்கு ஏன் அச்சம்? ஜெயக்குமார் கேள்வி..!

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் உட்பட ஒரு சிலர் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மற்றவர்கள் ஏன் அச்சப்படுகிறார்கள்

கள்ளச்சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.. கமல்ஹாசன்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் வரை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி அரசியல்  தலைவர்கள் கண்டனம்

'புஷ்பா 2' ரிலீஸ் தள்ளி வைக்க துணை முதல்வர் காரணமா? அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று ரிலீஸ் செய்தி