விஜய்-அஜீத்-பவன்கல்யாண். சுசீந்த

  • IndiaGlitz, [Wednesday,September 02 2015]

விஷால்-காஜல் அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'பாயும் புலி' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. 'பாண்டியநாடு' படத்தை அடுத்து மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி, விறுவிறுப்பான ஆக்சன் படமாக 'பாயும் புலி' படத்தை உருவாக்கியுள்ளதாகவும், படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் கண்டிப்பாக நல்ல ஒப்பனிங் இந்த படத்திற்கு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


'பாயும் புலி' சுசீந்திரனுக்கு எட்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சுசீந்திரன் இயக்கிய ஏழு படங்களில் 'ராஜபாட்டை' தவிர மற்ற அனைத்து படங்களும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுசீந்திரனின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. சுசீந்திரன் தனது அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்து வைத்துவிட்டதாகவும், இந்த படத்தில் விஜய், அஜீத் அல்லது பவன்கல்யாண் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என அவர் கருதுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சுசீந்திரனின் ஆசை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதனிடையே சுசீந்திரன் தயாரிப்பில் 'வில் அம்பு' என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், ஸ்ருஷ்டி டாங்கே உள்பட பலர் நடித்து வரும் இந்த படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.