வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்த மற்றொரு இயக்குனர்!

  • IndiaGlitz, [Tuesday,June 11 2019]

ஒரு திரைப்படத்திற்கு இயக்குனர் என்பவர் முதுகெலும்பு போன்றவர். அவர் இல்லாமல் ஒரு படம் உருவாக முடியாது. எனவேதான் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி முதல் முன்னணி நடிகர்கள் பலர் இயக்குனர்களுக்கு பெரும் மரியாதை கொடுப்பார்கள். ஆனால் நடிகர் வடிவேலு தன்னை கதாநாயகனாக்கி அழகு பார்த்த ஒரு இயக்குனரை ஒருமையில் பேசியது அனைத்து இயக்குனர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

ஏற்கனவே சமுத்திரக்கனி, நவீன், விஜய் மில்டன் உள்பட ஒருசில இயக்குனர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இயக்குனர் சுசீந்திரனும் வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

வடிவேலு அவர்கள் 23ஆம் புகேசி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கர் அவர்கள் குறித்து பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இயக்குனர் சிம்புதேவன் 23ஆம் புலிகேசி மூலம் இயக்குனராக அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே மாபெரும் வெற்றிபடத்தை நமக்கு தந்தார். அதன்பிறகும் பல தரமான திரைப்படங்களை நமக்கு தந்துள்ளார்.

ஒரு இயக்குனரை அவன், இவன் என்று மரியாதை இல்லாமல் பேசி இருப்பது மிகவும் தவறான அணுகுமுறை. புலிகேசிக்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்த 'இந்திரலோகத்தில் அழகப்பன், எலி, தெனாலிராமன் படங்களின் ரிசல்ட் தமிழ்த்திரையுலகம் அனைவருக்கும் தெரியும். ஒரு இயக்குனர் என்ற முறையில் வடிவேலு அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்' என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

More News

பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் விரட்டி அடிப்போம்: நாடக நடிகர் ஆவேசம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.

வடிவேலுக்கு எதிராக திரளும் இயக்குனர்கள்

வடிவேலு நடித்த 'பிரெண்ட்ஸ்' படத்தின் நேசமணி கேரக்டர் சமீபத்தில் உலக அளவில் டிரெண்ட் ஆகி அவரது புகழ் பரவிய நிலையில், அவர் அளித்த ஒரே ஒரு பேட்டியில்

கொலையுதிர்க்காலம் படத்திற்கு இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சக்ரி டோலட்டி இயக்கிய 'கொலையுதிர் காலம்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு: 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித், சோழமன்னர் ராஜராஜ சோழனை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்

கிரேஸி மோகன் குறித்த பதிவிற்கு வருத்தம் தெரிவித்த தனுஷ் தந்தை!

நடிகர், வசனகர்த்தா, நாடக ஆசிரியர் கிரேசி மோகன் நேற்று காலமானதை அடுத்து திரையுலகமே சோகக்கடலில் மூழ்கியிருந்தது. திரைலகினர் அனைவரும் கிரேஸி மோகனுக்கு சமூக வலைத்தளங்கள்