close
Choose your channels

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த முயற்சி: வாழ்த்து தெரிவித்த இயக்குனர் சுப்பிரமணியம் சிவா

Wednesday, June 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் அடுத்த முயற்சிக்கு இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரை உலகில் ’யார்’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கலைப்புலி எஸ் தாணு. அதன்பின் பல வெற்றி படங்களை தயாரித்தார் என்பதும் இவரது தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன்கள் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் தயாரித்த ’தெறி’ ‘கபாலி’ ‘அசுரன்’ ’கர்ணன்’ உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர் ’நானே வருவேன்’ ’வாடிவாசல்’ உட்பட ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ஆம்பூரில் முருகன் - கார்த்திகேயன் என்ற திரையரங்குகளை திறக்கவுள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் சுப்பிரமணியம் சிவா கூறியிருப்பதாவது:

கனவுகளை சிந்தனைகளாக்கி, சிந்தனைகளை செயல்களாக்கி, செயல்களை சாதனைகளாக மாற்ற தெரிந்த ஆற்றல் வீரர். தயாரிப்பாளர்களில் சூப்பர் ஸ்டார் எங்கள் கலைப்புலி எஸ். தாணு ஐயா, இன்று அமர்களமாக ஆம்பூரில் துவங்கும் முருகன்-கார்த்திகேயன் திரையரங்கள் மாபெரும் வசூல் சாதனைகள் படைக்க.. திரைத்துறை செழிக்க.. 'வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos