'தல அஜீத்துக்கு நன்றி கூறிய இயக்குனர் சிவா

  • IndiaGlitz, [Friday,November 27 2015]

கடந்த தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆன அஜீத்தின் 'வேதாளம்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'தல அஜீத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


அஜீத்துடன் இணைந்து பணியாற்றிய 'வீரம்' மற்றும் 'வேதாளம்' ஆகிய இரண்டு படங்களுமே தனக்கு பெண்கள் மதிப்பில் மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தி தந்ததாகவும், இந்த படத்தின் வசனங்கள் பெண்களால் விரும்பப்பட்டதாகவும் கூறிய சிவா, இதற்காக அஜீத்துக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

வேதாளம்' படத்தில் இடம்பெற்ற 'ஒரு ஆம்பளையைக் காப்பாத்துனா ஒருத்தனைக் காப்பாத்துன மாதிரி. ஆனால் ஒரு பொண்ணைக் காப்பாத்துனா ஒரு பரம்பரையையே காப்பாத்துன மாதிரி' என்ற வசனமும், 'பொண்ணை கட்டிக் கொடுக்கறது ஆணை நம்பி மட்டும் இல்லை. வீட்ல இருக்கும் பொண்ணுங்களை நம்பியும்தான்' என்ற வசனமும் பெண்கள் மத்தியில் பெரும் வரவெற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் 'வீரம்' படத்தின் ஒருசில வசனங்களும் பெண்களை கவர்ந்ததால் தற்போது இரண்டு படங்களுக்கும் சேர்த்து இயக்குனர் சிவா நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.