சட்ட நடவடிக்கை எடுப்பேன்: இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Sunday,September 22 2024]

இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சு. வெங்கடேசன் அவர்களின் புகழ்பெற்ற தமிழ் நாவல் நவ யுக நாயகன் வேல் பாரியின் பதிப்புரிமை வைத்திருப்பவராக, இந்த நாவலின் முக்கிய காட்சிகள் அனுமதியின்றி பல படங்களில் பயன்படுத்தப்படுவதை பார்த்து மிகுந்த வருத்தம் அடைகிறேன்.

சமீபத்திய திரைப்படத்தின் டிரெய்லரிலிருந்து, நாவலின் முக்கியமான காட்சிகள் திருடப்பட்டு பயன்படுத்தப்படுவதை பார்த்து மிகவும் வேதனையாக உள்ளது. தயவுசெய்து, இந்த நாவலின் காட்சிகளை திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் எந்தவொரு ஊடகத்திலும் பயன்படுத்த வேண்டாம். படைப்பாளிகளின் உரிமைகளை மதியுங்கள்! அனுமதியின்றி காட்சிகளை தழுவி எடுக்க வேண்டாம், மீறினால் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டி வரலாம்! இவ்வாறு இயக்குனர் ஷங்கர் பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜா நடித்து வரும் ’கேம் சேஞ்சர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக அவர் ’வேல் பாரி’ நாவலை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தற்போது இந்த எச்சரிக்கையை அவர் வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

 

More News

அஜித்தின் 'விடாமுயற்சி', கமலின் 'தக்லைஃப்' ரிலீஸ் தேதி இதுவா?

2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே பல பிரபல நடிகர்களின் படங்கள் வெளியானது என்பதும், குறிப்பாக விஜய் நடித்த 'கோட்' விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா'

'தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7' படத்தை  மிஸ் செய்தாரா தீபிகா படுகோன்: அவரே கூறிய காரணம்..!

உலகம் முழுவதும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த ஹாலிவுட் திரைப்பட தொடர் "தி பாஸ்ட் அண்ட் பியூரியஸ்." 2001-ஆம் ஆண்டு முதல் பாகம் வெளியான நிலையில் இதன் அடுத்தடுத்த

ஈ.வெ.ரா, அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த வாரிசு விஜய்.. ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு..!

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரின் அரசியல் வாரிசு விஜய் தான் என அவரது ரசிகர்கள் திருச்சியில் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம் ரவி விவகாரம்: முதல் முறையாக மனம் திறந்த பாடகி கெனிஷா..!

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பிரிவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கு தொடர்பு இருப்பதாக ஊடகங்கள்

மனைவி குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருந்த இன்ஸ்டாகிராம்.. ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு..!

நடிகர் ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை, அவருடைய மனைவியின் குடும்பத்தினரே இதுவரை கையாண்டு வந்த நிலையில், தற்போது அந்த கணக்கை அவர் மீட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.