'தனி ஒருவன்' ராஜாவுக்கு ஷங்கர் பாராட்டு

  • IndiaGlitz, [Friday,September 25 2015]

சமீபத்தில் வெளியான மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன். பெரிய எதிர்பார்ப்பின்றி வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகின்றது. ஜெயம் ரவியின் படங்களில் இந்த படம்தான் அதிக வசூலை தந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 'தனி ஒருவன்' படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து மட்டுமின்றி திரையுலக மேதைகளிடம் இருந்தும் ஜெயம் ராஜாவுக்கு நேரடியாக பாராட்டுக்கள் குவிந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜெயம் ராஜாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, 'சமீபத்தில் தனி ஒருவன்' படத்தை பார்த்தேன். மிகவும் பிடிந்திருந்தது. இயக்குனர் ராஜா திறமையாக இயக்கியிருக்கிறார். அற்புதமான நடிப்பை ஜெயம் ரவி வெளிபடுத்தியிருக்கிறார். அரவிந்த்சாமிவும் சிறப்பாக நடித்துள்ளார். ஆதியின் பின்னணி இசை அழுத்தமாக பதிந்திருக்கிறது. படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார். ஷங்கரின் பாராட்டுக்களுக்கு பதிலளித்த ஜெயம் ராஜா, 'தனக்கு இதைவிட வேறு பெருமை தேவையில்லை என்று கூறியதோடு ஷங்கருக்கு நன்றியும் தெரிவித்து கொண்டார்.