போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது:  அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய சசிகுமார்

  • IndiaGlitz, [Wednesday,November 29 2023]

’பருத்திவீரன்’ பிரச்சனை குறித்து வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜாவின் அறிக்கையோடு இந்த பிரச்சனையை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் சசிகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது’ என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான ’பருத்திவீரன்’ திரைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து ஞானவேல் ராஜா இன்று காலை வருத்தம் தெரிவித்த நிலையில் போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது என்று இயக்குனர் சசிகுமார் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் செய்த பதிவில் ’அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் என்ன? நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா, அப்படி எனில் அந்த சில வார்த்தைகள் என்ன?

திட்டமிட்டு ஒருவரை அவமானப் படுத்தி விட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம். இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு? என்று அடுக்கடுக்காக இயக்குனர் சசிகுமார் கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.