close
Choose your channels

'மெய்யழகன்' இயக்குனர் பிரேம்குமாரின் அடுத்த படம்.. ஆச்சரியம் அடைந்த கார்த்தி..!

Monday, October 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’, கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த ’மெய்யழகன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்குனர் பிரேம்குமார் இயக்கி உள்ள நிலையில், இரண்டு படங்களுமே உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்த படம் என்பதைக் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அடுத்ததாக இயக்குனர் பிரேம்குமார் வரலாற்று திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ’மெய்யழகன்’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ’மெய்யழகன்’ படம் வெளியான பிறகு பலரிடம் உரையாடல் குறித்த விவாதத்தை தொடங்கியுள்ளது. அந்த அளவுக்கு உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர் பிரேம்குமார்.

அடுத்ததாக, அவர் ஒரு வரலாற்று கதை வைத்திருக்கிறார்; அதன் எழுத்து நடையை நான் படித்து முடித்ததும் "யார்ரா நீ?" என்ற மரியாதை போய் அவரிடம் எனக்கு உரிமையே வந்துள்ளது. அந்த கதையை அவர் எப்போது எழுதி முடிப்பார் என்பதை நான் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார் கார்த்தி.

இந்த தகவலின் அடிப்படையில், இயக்குனர் பிரேம்குமார் அடுத்த படம் வரலாற்று கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment