close
Choose your channels

'திருப்பாச்சி' அஜித்துக்காக எழுதப்பட்ட கதையா? பேரரசு வெளியிடும் ரகசியம்

Sunday, November 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'திருப்பாச்சி'. இயக்குனர் பேரரசுவின் முதல்படமான இந்த படத்தின் கதை அஜித்துக்காக எழுதப்பட்டதாகவும், ஆனால் விஜய்யின் கால்ஷீட் தயாராக இருந்ததால் அவர் நடித்ததாகவும், இயக்குனர் பேரரசு பிரபல வார இதழ் ஒன்றின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் இராம.நாராயணனிடம் உதவியாளராக இருந்தபோதே குழந்தை நட்சத்திரங்களான ஷாலினி, ஷாமிலி ஆகியோர்களை தனக்கு நன்றாக தெரியும் என்றும் அந்த வகையில் அஜித் தனக்கு இயக்குனராகும் முன்பே நல்ல அறிமுகம் என்று பேரரசு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
தன்னை 'தல' பார்க்கும்போதெல்லாம் எப்ப இயக்குனராக மாறப்போறீங்க; என்று கேட்பார் என்றும் திருப்பாச்சி கதையை அஜித்தை மனதில் வைத்தே தயார் செய்ததாகவும், ஆனால் விஜய்யின் கால்ஷீட் தயாராக இருப்பதாக தயாரிப்பு தரப்பு கூறியதால் அந்த படத்தில் விஜய் நடித்ததாகவும் பேரரசு கூறியுள்ளார். விஜய் இந்த படத்தில் கமிட் ஆனதும் முதல் ஆளாக தல அஜித்திடம்தான் இந்த விஷயத்தை கூறியதாகவும், அதை கேட்டு 'ஆல் தி பெஸ்ட்' என்று தல வாழ்த்தியதாகவும் பேரரசு கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.