'திருப்பாச்சி' அஜித்துக்காக எழுதப்பட்ட கதையா? பேரரசு வெளியிடும் ரகசியம்

  • IndiaGlitz, [Sunday,November 27 2016]

இளையதளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'திருப்பாச்சி'. இயக்குனர் பேரரசுவின் முதல்படமான இந்த படத்தின் கதை அஜித்துக்காக எழுதப்பட்டதாகவும், ஆனால் விஜய்யின் கால்ஷீட் தயாராக இருந்ததால் அவர் நடித்ததாகவும், இயக்குனர் பேரரசு பிரபல வார இதழ் ஒன்றின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் இராம.நாராயணனிடம் உதவியாளராக இருந்தபோதே குழந்தை நட்சத்திரங்களான ஷாலினி, ஷாமிலி ஆகியோர்களை தனக்கு நன்றாக தெரியும் என்றும் அந்த வகையில் அஜித் தனக்கு இயக்குனராகும் முன்பே நல்ல அறிமுகம் என்று பேரரசு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
தன்னை 'தல' பார்க்கும்போதெல்லாம் எப்ப இயக்குனராக மாறப்போறீங்க; என்று கேட்பார் என்றும் திருப்பாச்சி கதையை அஜித்தை மனதில் வைத்தே தயார் செய்ததாகவும், ஆனால் விஜய்யின் கால்ஷீட் தயாராக இருப்பதாக தயாரிப்பு தரப்பு கூறியதால் அந்த படத்தில் விஜய் நடித்ததாகவும் பேரரசு கூறியுள்ளார். விஜய் இந்த படத்தில் கமிட் ஆனதும் முதல் ஆளாக தல அஜித்திடம்தான் இந்த விஷயத்தை கூறியதாகவும், அதை கேட்டு 'ஆல் தி பெஸ்ட்' என்று தல வாழ்த்தியதாகவும் பேரரசு கூறியுள்ளார்.

More News

அரவிந்தசாமி-த்ரிஷாவின் சதுரங்கவேட்டை-2 படத்தில் திடீர் மாற்றம்?

'தனி ஒருவன்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன அரவிந்தசாமி சமீபத்தில் 'சதுரங்க வேட்டை 2' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நாளை மதியம் 2 மணிக்கு சென்னை லயோலா கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்திரா காந்தியை பிடல் காஸ்ட்ரோ கட்டிப் பிடித்தது ஏன்? சுவாரஸ்ய தகவல்

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி பெற்றதோடு, கியூபா நாட்டு மக்களுக்கு வாழும் கடவுளாக திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார் என்ற செய்தியை பார்த்தோம்.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு நிர்வாகத்தின் முக்கிய வேண்டுகோள்

நடிகர் சங்க 63வது பொதுக்குழு நாளை பிற்பகல் 2 மணிக்கு சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறவுள்ளது.

2.0 படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினியின் நெருங்கிய நண்பர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.