'ஜெய்பீம்' விவகாரம்: சூர்யாவுக்கு ஆதரவளித்த பா ரஞ்சித்!

’ஜெய்பீம்’ படம் விவகாரம் தொடர்பாக சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவளித்து #westandwithsurya என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து வரும் நிலையில் இதே ஹேஷ்டேக்கை பதிவு செய்து இயக்குனர் பா ரஞ்சித் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ’ஜெய்பீம்’. இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களும், ஒரு சில எதிர்மறை விமர்சனங்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வன்னியர் சமுதாய அமைப்புகள் இந்த படத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒருசிலர் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் #westandwithsurya என்ற ஹேஷ்டேக்கை அவரது ரசிகர்கள் ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கிற்கு மிகப்பெரிய ஆதரவு எழுந்து உள்ளது என்பதும் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஹேஷ்டேக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது ஆதரவை சூர்யாவுக்கு தெரிவித்துள்ளார்.

More News

'காத்துவாக்குல ரெண்டு காதல்' சமந்தாவின் கேரக்டர் அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது

'ஜெய்பீம்' படத்தின் நோக்கம் இதுதான்: திருமாவளவனுக்கு சூர்யா பதில்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படத்தை பல அரசியல் பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில்

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் இணைந்த மலையாள நடிகர்!

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக

12 வருடம் கழித்து சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்கும் அஜித் பட நாயகி!

இயக்குநர் பொன்குமரன் இயக்கத்தில் நடிகர் ஜீவா மற்றும் சிவா கூட்டணியில் உருவாக இருக்கும் “கோல்மால்“ திரைப்படத்தின்

செல்பி எடுக்கும்போது ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூவர்: இருவர் உடல் மீட்பு!

கடலூரில் ஆற்று நீரில் குளித்துக் கொண்டிருந்த மூவர் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களில் இருவரது உடல் தற்போது மீட்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.