பொள்ளாச்சி பெண்களை கேள்வி கேட்டவர்களுக்கு 'தல' சொன்ன பதில்: இயக்குனர் நவீன்

  • IndiaGlitz, [Wednesday,August 07 2019]

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் முதல் காட்சி இன்னும் ஒரு சில மணி நேரங்களில் திரையிடப்பட உள்ள நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை ஏற்கனவே பார்த்த பத்திரிகையாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்ட பெண்ணாக இருந்தாலும் 'நோ' என்றால் நோ' தான் என்பதை அஜித்தின் வசனங்கள் மூலம் அழுத்தந்திருத்தமாக கூறியிருப்பதுதான் இந்த படத்தின் ஹைலைட்

இந்த நிலையில் இந்த படம் குறித்து 'மூடர் கூடம்' இயக்குனர் நவீன் கூறியதாவது: 'பிங்க்' போன்ற ஒரு புரட்சிகர சினிமா தமிழகத்திற்கு தேவையான ஒன்று. பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை 'இவ மட்டும் என்ன பத்தினியா? எதுக்கு கார்ல ஏறி போனா?' என்று கேட்டவர்களுக்கு 'நேர் கொண்ட பார்வை' படத்தில் தல அஜித் சொல்வதுதான் பதில். #NoMeansNo என்று கூறியுள்ளார்.

 

இந்த படம் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளாமல் ஒரு சில அரைவேக்காட்டு விமர்சகர்கள் மட்டும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறி சிக்கலில் மாட்டி உள்ளனர். இந்த படத்தில் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ள பெண்கள் குறித்த ஒரு புரிதல் வேண்டும் என்பது முக்கியமானது ஆகும்

More News

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'ஹீரோ'. ' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார்.

சூப்பர்ஹிட் தெலுங்கு பட ரீமேக்கில் இணையும் புதிய ஜோடி

கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீஸ் ஆன சூப்பர் ஹிட் ரொமான்ஸ் திரைப்படம் 'நின்னுக்கோரி'. இந்த திரைப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடதக்கது 

அருண்விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் தந்தை விஜயகுமார்

பொதுவாக திரையுலகில் உள்ள அப்பாக்கள் தங்கள் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்ய சொந்தப் படம் தயாரிப்பது வழக்கம். ஆனால் நடிகர் அருண் விஜய் கடந்த பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு

பிகில்' படத்தின் அடுத்தகட்ட பணியை தொடங்கிய விஜய்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'நேர் கொண்ட பார்வை'யும், 'நேரு கொண்ட பார்வை'யும்: பார்த்திபன்

ஒரு பக்கம் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்னொரு பக்கம் காஷ்மீர் மாநிலத்திற்கு முன்னாள் பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதியை