close
Choose your channels

இயக்குனர் முத்தையா அடுத்த பட ஹீரோ இவரா? மல்டி ஸ்டார் படம் என்ன ஆச்சு?

Wednesday, June 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் முத்தையா அடுத்த படத்தை மல்டி ஸ்டார் படமாக இயக்க இயக்குகிறார் என்ற செய்தி வெளியான நிலையில் தற்போது அவருடைய படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் கசிந்து உள்ளது.

’விருமன்’ படத்திற்கு பிறகு தனது மகன் விஜய் முத்தையா நடிப்பில் உருவாகி வரும் ’சுள்ளான் சேது’ என்ற படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை அடைந்து விட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் முத்தையா இயக்கும் அடுத்த படம் ஒரு மல்டி ஸ்டார் படம் என்றும் குறிப்பாக விக்ரம் பிரபு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகிய இருவரும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தி வெளியானது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி முத்தையாவின் அடுத்த படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

முதன்முறையாக இயக்குனர் முத்தையா மற்றும் நடிகர் அருள்நிதி ஒரு படத்தில் இணைய இருப்பதால் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.