மித்ரன் ஜவஹர் இயக்கும் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோ.. லண்டனில் படப்பிடிப்பு..!

  • IndiaGlitz, [Friday,December 01 2023]

தமிழ் திரையுலகின் இயக்குனர்களில் ஒருவரான மித்ரன் ஜவஹர் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்த ’யாரடி நீ மோகினி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்றும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மித்ரன் ஜவஹர் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் மாதவன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ராதிகா உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

லண்டன் படப்பிடிப்பின் போது ராதிகா மற்றும் மாதவன் எடுத்த புகைப்படம் ராதிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.