'கில்லி' படத்தை பார்க்க வந்தவர்கள் அளவுக்கு கூட ஓட்டு போட வரவில்லை: இயக்குனர் ஹரி வருத்தம்..!

  • IndiaGlitz, [Monday,April 22 2024]

இயக்குனர் ஹரி சமீபத்தில் நெல்லையில் ’ரத்னம்’ படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட போது ’கில்லி’ போன்ற திரைப்படங்களுக்கு வந்த ரசிகர்கள் கூட்டத்தின் அளவுக்கு கூட ஓட்டு போட பொதுமக்கள் வரவில்லை என்பது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்தார்.

சமீபத்தில் விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் ரீரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் முதல் நாள் வசூல் புதிய திரைப்படங்களை வசூலை விட அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ’ரத்னம்’ படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நெல்லையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஹரி தனது கருத்துக்களை தெரிவித்தார்.

அப்போது ’கில்லி’ போன்ற படங்கள் ரீரிலீஸ் ஆகும் போது வரும் ரசிகர்கள் கூட்டத்தின் அளவு கூட ஓட்டு போட வரவில்லை என்பது தனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது, முக்கியமான வேலைகள் இருந்து ஓட்டு போட வரவில்லை என்றால் கூட பரவாயில்லை, எதற்காக ஓட்டு போட வேண்டும் என்று நினைத்து மக்கள் வராமல் இருப்பது சரியானது அல்ல என்று தெரிவித்தார்.

வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை, பொதுமக்கள் கண்டிப்பாக அந்த கடமையை நிறைவேற்ற வேண்டும், என்னுடைய வாக்கால்தான் முதல்வர், பிரதமரை தேர்வு செய்தேன் என்ற மனப்பான்மை மக்களுக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஒருவர் வாக்களிக்காமல் இருப்பது டிக்கெட் கிடைக்காமல் தியேட்டர் வாசலில் நிற்பது போல் ஆகிவிடும் என்றும் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் வீட்டிற்கு திரும்பி தான் செல்ல வேண்டும் அதுபோல் வாக்களிக்கவில்லை என்றால் வெறும் பிரஜையாக தான் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

More News

கமல், ரஜினி படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

கமல்ஹாசன் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களின் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் துரை காலமானார். அவருக்கு வயது 84.

என் புருஷனை எனக்கு தெரியும், பொண்டாட்டி யாருன்னு விஜய்க்கு தெரியும்: ஒரு குழப்பமும் இலலை: நடிகை சங்கீதா..!

விஜய்யின் மனைவி பெயரும் சங்கீதா, உங்கள் பெயரும் சங்கீதா என்பதால் அந்த சமயத்தில் சில குழப்பமான செய்திகள் வந்ததே என்ற கேள்விக்கு நடிகை சங்கீதா பதில் அளித்துள்ள வீடியோ

மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் களை கட்டிய மக்கள்! விண்ணை முட்டிய ஹர ஹர மகா தேவா கோஷம் !

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழா களைகட்டிக் கொண்டாடி வருகிறது. இன்று (ஏப்ரல் 22) காலை 6.30 மணி அளவில் கோயிலில்

நாங்கள் எடுத்து கொண்ட முதல் புகைப்படம்.. திருமண நாளில் விஷ்ணு விஷாலின் பதிவு..!

நடிகர் விஷ்ணு விஷால் இன்று தனது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் தனது மனைவியுடன் எடுத்த முதல் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

முதல்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி.. இந்த ஒரு காரணத்திற்காக எடுத்த முடிவு..!

விஜய் தொலைக்காட்சி பிரபலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன் கணவரை விவாகரத்து செய்த நிலையில் இந்த ஒரு காரணத்திற்காக தான் நான் விவாகரத்து செய்தேன் என நீண்ட நாட்களுக்கு