இந்தியாவில் இருந்து சட்டரீதியாக பிரிய தயார். இயக்குனர் கெளதமன்

  • IndiaGlitz, [Thursday,April 13 2017]

டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குனர் கெளதமன் தலைமையில் சுமார் 50 இளைஞர்கள் பூட்டு போட்டனர். இதனால் சென்னையின் போக்குவரத்தே ஸ்தம்பித்த நிலையில் இயக்குனர் கெளதமனை கைது செய்த போலீசார் பூட்டை உடைத்து போக்குவரத்தை சரிசெய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவுடன் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கெளதமன், 'அன்று மகாத்மா காந்தி அரை நிர்வாணமாக போராடி சுதந்திரம் பெற்று தந்தார். அதே முறையை எங்கள் விவசாயிகள் கையாண்டனர். முழு நிர்வாணத்திலும் போராடி பார்த்துவிட்டனர். ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
எங்கள் விவசாயிகளையும் விவசாயத்தை அழித்துவிட்டு ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே மோடி அழிக்க நினைக்கின்றார். ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்தல், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்தல், மீனவர்கள் பிரச்சினை தீர்க்க பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல், கச்சத்தீவை மீட்டுதல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேறும் வரை போராடுவோம். இந்த போராட்டத்தில் நாங்கள் செத்தாலும் பராவாயில்லை, போராட்டத்தை கைவிட மாட்டோம்
தமிழர்களுடைய உரிமையை பறிக்க நினைத்தால் இந்தியாவில் இருந்து சட்டப்படி பிரியவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்' என்று இயக்குனர் கெளதமன் கூறியுள்ளார்.

More News

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு பூட்டு போட்ட பிரபல இயக்குனர் கைது

தமிழக விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு வித்தியாசமான முறைகளில் தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

ஈழத்தமிழர் பிரச்சனை என்பது இதுதான். ராஜ்கிரண் கூறும் நிதர்சன உண்மை

உலகில் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளில் ஒன்று ஈழத்தமிழர் பிரச்சனை. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று நார்வே உள்பட பல நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பலமுறை முயற்சி செய்தும் இன்னும் தீராத பிரச்சனையாக உள்ளது.

கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா 'கட்டப்பா' சத்யராஜ்?

உலகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி 'பாகுபலி 2' திரைப்படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் கர்நாடகத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

என்னையும் விஜய்யையும் இணைத்து இயக்க தகுதியுள்ள ஒரே இயக்குனர் இவர்தான். மகேஷ்பாபு

கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் இளையதளபதி விஜய்.

சூர்யா, கார்த்தி, யுவன் என்னுடைய வகுப்பு தோழர்கள். சொல்வது ஒரு சூப்பர் ஸ்டார்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருப்பவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி.