ஆட்சியை பிடிப்பது எப்போது? புதிய கட்சி ஆரம்பித்துள்ள இயக்குனர் கவுதமன் பேட்டி!

  • IndiaGlitz, [Monday,February 25 2019]

தமிழ்நாட்டில் ஏற்கனவே நூற்றுக்கும் மேல் அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் கவுதமன் 'தமிழ்ப் பேரரசு கட்சி' என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

இந்த கட்சி ஆரம்பிக்க வேண்டிய நோக்கம் குறித்து கவுதமன் கூறியபோது, 'மக்களுக்கு எதிரான திட்டங்களை நாங்கள் கடந்த சில வருடங்களாக அறவழியில் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறோம். ஆனால் ஆளும் அரசுகள் எங்களது போராட்டங்களை கண்டு கொள்வதில்லை. அதுமட்டுமின்றி எங்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.

எனவே சிறு அமைப்புகள் நடத்தும் போராட்டங்களுக்கு உரிய மரியாதை இல்லை என்பதை புரிந்து கொண்டு பெரும் படையாக மாறி எங்களை எதிர்ப்பவர்கள் எமனாக இருந்தாலும் துணிச்சலுடன் எதிர்கொள்ளவே இந்த அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன்.

அரசியல் என்ற ஆயுதத்தை வைத்து எங்கள் இனத்தை வேரறுத்து வருகின்றனர். எனவே அதே அரசியலை நாங்களும் கையிலெடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டோம். எங்கள் கட்சி எங்கள் இனத்தின் எதிரிகளை அப்புறப்படுத்தும்.

கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு குறைந்தது 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அடுத்த பத்து ஆண்டுகளில் ஆட்சியை பிடிப்போம்.

இவ்வாறு கவுதமன் கூறியுள்ளார்.
 

More News

30 ஆண்டுகால பந்தம், பாசம் போய்விட்டதே! அன்புமணி வேதனை

7 மக்களவை தொகுதி ஒரு மாநிங்களவை தொகுதிக்காக பாமக தவறான முடிவெடுத்துவிட்டதாக மாற்று கட்சியினர் மட்டுமின்றி பாமகவில் இருக்கும் சிலரே தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யாவின் புதிய முயற்சிக்கு வரவேற்பு அளித்த தனுஷ்-அனிருத்

திரையுலக பிரபலங்கள் அனைவருமே கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களிலும் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு பிரபலத்திற்கும் தற்போது வலைத்தளம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது

கமல் கட்சியில் இணைந்த பாமகவின் முக்கிய பிரமுகர்!

அதிமுக ஆட்சி மீதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய பாட்டாளி மக்கள் கட்சி திடீரென கடந்த வாரம் அதிமுக கூட்டணியில் இணைந்து

எனக்கும் ஒரு நாள் ஆஸ்கார் கிடைக்கும்: விக்னேஷ் சிவன்

2019ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. கிரீன் புக்', 'ரோமா', 'பிளாக் பாந்தர் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கார் விருதினை அள்ளின.

விட்டா என்னை அடிச்சிருவிங்க போல: செய்தியாளர்கள் சந்திப்பில் திணறிய அன்புமணி

அதிமுக அரசை கடந்த மூன்று வருடங்களாக கடுமையாக விமர்சனம் செய்த கட்சிகளில் ஒன்று பாமக. தமிழக அமைச்சர்கள் செய்த ஊழல் குறித்து புத்தகமே வெளியிட்ட கட்சியான பாமக,