வெறும் இரண்டு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய சூப்பர்ஸ்டார் ரஜினி! யாரிடம் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,October 12 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கால்ஷீட் கிடைக்கும் என்றால் பல கோடிகளை கொட்டி கொடுக்க பல தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கும் நிலையில் வெறும் இரண்டே இரண்டு ரூபாய் அட்வான்ஸ் வாங்கி ஒரு படத்தில் அவர் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ரஜினிக்கு இரண்டு ரூபாய் கொடுத்து கால்ஷீட் பெற்றவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறிய பாரதிராஜா, 'நான் எப்போதும் பெரிய ஸ்டார்களை வைத்து படமெடுக்க விரும்புவதில்லை. குடிசை தொழில் மாதிரி அறிமுக நடிகர், நடிகைகளை மட்டுமே வைத்து படமெடுப்பேன். பெரிய ஸ்டார்களுடன் இணைந்து படமெடுத்தால் என்னுடைய தனித்தன்மையை இழந்துவிடுவேனோ என்ற பயமும் ஒரு காரணம்

இந்த நிலையில்தான் ஜி.எம்.குமாரும், லிவிங்ஸ்டனும் ஒரு கதை சொன்னார்கள். அந்த கதை எனக்கு பிடித்திருந்ததால் ரஜினியிடம் போய் அந்த கதையை கூறும்படி சொன்னேன். 16 வயதினிலேயே படத்திற்கு பின்னர் அவருடைய வளர்ச்சி அபாரமாக இருந்தது. இருந்தாலும் அவரிடம் சில விழாக்களில் பார்த்து சிரிப்பது, பேசுவது ஆகியவை இருக்குமேயன்றி எனக்கு படம் நடித்து கொடுங்கள் என்று நான் கேட்டது இல்லை.

இந்த நிலையில்தான் இந்த கதையை கேட்டு என்னிடம் பேசிய ரஜினி, 'கதை சூப்பர், நாம ரெண்டு பேரும் இந்த படத்துல வொர்க் பண்றோம். நீங்க தான் இயக்குனர் என்று கூறினார். ரஜினியின் சம்மதம் கிடைத்துவிட்டதை அறிந்து என்னை சுற்றி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போதே எவ்வளவு வருமானம் வரும் என்று கணக்கு போட்டனர்.

ரஜினி சூப்பர் ஸ்டார்  என்பதாலும், பெரிய சம்பளம் வாங்குபவர் என்பதாலும் அன்றைய காலகட்டத்தில் ரூ.10 லட்சம் எடுத்து கொண்டு அவருக்கு அட்வான்ஸ் கொடுக்க சென்றேன். பணப்பெட்டியை பார்த்ததும் உடனே அதை ஒதுக்கி வைத்துவிட்ட ரஜினி, உங்கள் பாக்கெட்டில் எவ்வளவு பணம் வைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அதில் ஒரு நூறு ரூபாய், ஒரு ஐம்பது ரூபாய் மற்றும் ஒரு இரண்டு ரூபாய் இருந்தது. அந்த இரண்டு ரூபாயை மட்டும் அட்வான்ஸாக பெற்று கொண்டு அந்த படத்தில் நடித்தார். படம் முடிந்த பின்னர்தான் அவருடைய சம்பளம் செட்டில் செய்யப்பட்டது' என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்

ஒருசில நடிகர்கள் பணத்தை செட்டில் செய்தால்தான் கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க வருவேன் என்று கூறுபவர்கள் மத்தியில் ரஜினி இரண்டு ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு நடித்த விஷயம் தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் பாரதிராஜா தெரிவித்தார். அதனால் தான் ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டாராக உள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

More News

அரசியல்வாதி ஆனாலும் கமல்ஹாசனால் நடிப்பை விட முடியாது: பாரதிராஜா

கமல்ஹாசன் ஒரு அற்புதமான கலைஞன். சினிமாவுக்காக கையை வெட்ட வேண்டும் என்றாலும் வெட்டி கொள்வார். உலக படங்களை பார்த்து ஏன் நம்மால் இந்த அளவுக்கு படம் எடுக்க முடியவில்லை என்று கோபப்படுவார்.

சிரிப்பழகி சினேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவுக்கு பின்னர் சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஒரே நடிகையான சினேகா இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு IndiaGlitz  தனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

மெர்சல் கதை இதுதானா? இணையத்தில் பரவும் வதந்தி

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் வரும் 18ஆம் தேதி தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

மூன்றாம் பிறை ரீமேக்: வித்யாபாலன் கூறிய வித்தியாசமான பதில்

கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய படம் 'மூன்றாம் பிறை'. கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருதும்,

சிம்பு-தனுஷ் நாயகிக்கு புதிய பதவி கொடுத்த ராகுல்காந்தி

நடிகர் சிம்புவுடன் 'குத்து' மற்றும் தனுஷுடன் 'பொல்லாதவன் உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும், கன்னட, தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ரம்யா.