500 நாளில் ஒருநாள் கூட விஜய் தவறியதில்லை: இயக்குனர் பரதன்

  • IndiaGlitz, [Friday,March 23 2018]

இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் 'அழகிய தமிழ்மகன்' மற்றும் பைரவா' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதுபோல் விஜய் நடித்த 'கில்லி' மற்றும் 'மதுர' ஆகிய இரண்டு படங்களுக்கு பரதன் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் பரதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது, 'விஜய்யுடன் நான் நான்கு படங்களில் பணிபுரிந்துள்ளேன். கிட்டத்தட்ட அவருடன் நான் இந்த படங்களிலும் சேர்த்து சுமார் 500 நாட்கள் பணிபுரிந்துள்ளேன். இந்த 500 நாளில் அவர் ஒருநாள் கூட படப்பிடிப்புக்கு தாமதமாக வந்து நான் பார்த்ததில்லை. நேரந்தவறாமையை நான் விஜய்யிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்' என்று கூறியுள்ளார். மேலும் விரைவில் அவருடன் மீண்டும் ஒருமுறை பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் சிறுத்தை சிவா இயக்கிய 'வீரம்' படத்தின் வசனம் எழுதும்போது ஒரே ஒருமுறை அஜித்தை நேரில் பார்த்ததாகவும், அவர் தன்னைப்பற்றியும், தனது குடும்பத்தை பற்றியும் அக்கறையுடன் விசாரித்ததாகவும், அதுமட்டுமின்றி தன்னுடைய பணியை அஜித் பாராட்டியதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஒரு புதிய திரைப்படத்திற்காக பரதன் தயாராகியிருப்பதாகவும், அதிரடி ஆக்சன் படமான இந்த படம் குறித்த தகவல்களை விரைவில் அறிவிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

போயஸ் கார்டனில் தினேஷ் கார்த்திக்-தீபிகாவின் கனவு இல்லம்

தினேஷ் கார்த்திக் சமீபத்தில் இலங்கையில் நடந்த மூன்று நாடுகள் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்தியாவின் ஹீரோவாக மாறினார்.

பெண் வேட புகைப்படம் குறித்து அனிருத் தரப்பின் விளக்கம்

இணையதளங்களில் இளம் இசைப்புயல் அனிருத்தின் பெண் வேட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நயன்தாரா நடித்து வரும் 'கோலமாவு கோகிலா' படத்தில்தான் அனிருத் பெண் வேடத்தில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

திரையரங்க வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்: நாளை முதல் இயங்கும் என அறிவிப்பு

சென்னை தவிர தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள் கடந்த 16-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வந்ததால் திரையங்குகள் இயங்கவில்லை.

இது இயலாமை அல்ல; இழிவான அரசியல்: மத்திய அரசை போட்டுத்தாக்கும் கமல்

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை அமைப்பதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு சுணக்கம் காட்டி வருவது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்து வருகின்றன

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் திருமண நாள் கொண்டாட்டம்

இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது திருமண நாளை நேற்று உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடினார்.