படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் பரிதாபமாக உயிரிழந்த அறிமுக இயக்குனர்

  • IndiaGlitz, [Wednesday,June 10 2020]

அறிமுக இயக்குனர் ஒருவர் பல போராட்டங்களுக்கு பிறகு ஒரு திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் திடீரென எதிர்பாராத வகையில் அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இயக்குனர் பாலமித்ரன் என்பவர் ஒரு சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்து தற்போது ’உடுக்கை’ என்ற திரைப்படத்தை கடந்த சில மாதங்களாக இயக்கி வந்தார். இந்த படத்தில் விபின், சஞ்சனா சிங், அங்கிதா, மொட்டை ராஜேந்தரின், மயில் சாமி உள்பட பலர் நடித்து வந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே மீதம் இருந்ததாகவும் இதனை அடுத்து இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென இயக்குனர் பாலமித்ரன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் படக்குழுவினர் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மறைந்த இயக்குனர் பாலமித்ரனுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்

திரையுலகில் போராடி வாய்ப்பு பெற்று முதல் படம் வெளியாகும் முன்னரே அந்த படத்தின் இயக்குனர் உயிரிழந்தது கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது