ரஜினி படத்தை ஆரம்பிக்கும் முன் ஏ.ஆர்.முருகதாஸ் சென்ற இடம்!

  • IndiaGlitz, [Friday,March 29 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்திலும் நடித்து முடித்தவுடன் திருப்பதி சென்று அந்த படத்தின் வெற்றிக்காக வழிபடுவதுண்டு. அந்த வகையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பழனி சென்று முருகனை வழிபட்டுள்ளார்.

ரஜினியின் அடுத்த படமான 'தலைவர் 166' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன் பழனிமலை முருகன் கோவிலுக்கு சென்ற ஏ.ஆர்.முருகதாஸ், படம் நல்லபடியாகயாக உருவாகவும் வெற்றி பெறவும் வேண்டிக்கொண்டார். அவர் கோவிலில் பூசாரியுடன் நிற்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ரஜினிகாந்த் ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகவிருக்கும் இந்த படம் ஆக்சன் கலந்த அரசியல் படமாக இருக்கும் என்றும், ரஜினியின் அரசியல் எண்ட்ரிக்கு இந்த படம் பொருத்தமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

More News

கணவனை கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் கணவரை கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சரவணபவன் ராஜாகோபால் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

கொலை வழக்கு ஒன்றில் சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று உறுதி செய்துள்ளது.

சூப்பர் டீலக்ஸ்: சமந்தாவின் நடிப்புக்கு சர்வதேச ஊடகம் பாராட்டு

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா, நடிப்பில் யுவன்ஷங்கர்ராஜா இசையில் உருவாகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

நமீதா காரை சோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் ஆணையத்தின் ஒரு பிரிவான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.

புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பாரத பிரதமர்: பிரேமலதா உளறல்

அதிமுக கூட்டணியில் இணைந்து நான்கு தொகுதிகளை பெற்ற விஜயகாந்தின் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்  செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.