'கொட்டுக்காளி' திரைப்படத்தை ரிலீஸ் செய்திருக்க கூடாது: இயக்குனர் அமீர்

  • IndiaGlitz, [Tuesday,August 27 2024]

சமீபத்தில் வெளியான ’கொட்டுக்காளி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்திருக்கக் கூடாது என்றும் ஓடிடியில் தான் ரிலீஸ் செய்திருக்க வேண்டும் என்றும் இயக்குனர் அமீர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் இயக்குனர் அமீர் பேசிய போது ’வாழை’ திரைப்படம் கமர்ஷியலுக்கு அருகில் உள்ள திரைப்படம் என்பதால் அந்த படம் திரையரங்குகளில் நல்ல வெற்றி பெற்றது. ஆனால் ’கொட்டுக்காளி’ திரைப்படம் முழுக்க முழுக்க சர்வதேச திரைப்பட விழாவுக்காக உருவாக்கப்பட்டது.

வணிக சினிமாக்களுடன் போட்டி போட இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு இருக்க கூடாது, நான் ’கொட்டுக்காளி’ படத்தை தயாரித்திருந்தால் திரையரங்கில் ரிலீஸ் செய்திருக்க மாட்டேன், சர்வதேச விருதுகளை வென்ற திரைப்படத்தை வணிக நோக்கத்தில் திரையரங்குகளில் திணிப்பது அவசியம் அற்றது மற்றும் வன்முறையானது’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இதே இயக்குனர் அமீர் தான், விஜய் சேதுபதி தயாரித்த ’மேற்கு தொடர்ச்சி மலை’ படம் திரையரங்கில் வெளியான போது, திரையரங்கில் இப்படியான படங்களை மட்டும் தான் கொண்டுவர வேண்டும்’ என்று பேசி இருந்தார் என நெட்டிசன்கள் ஞாபகப்படுத்தி வருகின்றனர்.

 

More News

திரையுலகமே ஒரு விபச்சார விடுதி தான்: பிரபல நடிகை ஆவேசம்..!

ஏற்கனவே நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக மலையாள திரை உலகில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டுள்ள நிலையில் வங்காள திரை உலகமே ஒரு விபச்சார

ரஜினியின் அடுத்த படத்தில் அமீர்கான் நடிக்கின்றாரா? வேற லெவல் சம்பவம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தில் அமீர்கான் நடிக்க இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிரைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்த எம்.ஜி.ஆர், சிங்கப்பூரிலிருந்து வந்த மருந்து....

மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் குறித்து அவரது மனைவி திருமதி முத்துலட்சுமி Indiaglitz க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

டெங்குவில் இருந்து மீண்ட சீரியல் நடிகை.. உடனே ஒரு ஆன்மீக பயணம்..!

கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த 'மகாநதி' தொடரில் நடித்த நடிகை திவ்யா தற்போது உடல்நிலை சீரானதை அடுத்து ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளார்.

'சுந்தரி 2' தொடரில் இணைந்த 'வானத்தை போல' பிரபலங்கள்.. என்ன கேரக்டர்கள் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பான 'வானத்தைப்போல' சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீரியலில் நடித்த இரண்டு முக்கிய கேரக்டர்கள் தற்போது 'சுந்தரி 2'  சீரியலில் இணைந்துள்ளதாக