'கபாலி' கணக்கை காட்ட முடியுமா? ரஜினிக்கு அமீர் கேள்வி

  • IndiaGlitz, [Tuesday,November 15 2016]

பிரதமர் மோடியின் கருப்புப்பண நடவடிக்கைக்கு முதல் ஆளாக ஆதரவு குரல் கொடுத்த ரஜினி அவர்கள் 'கபாலி' கணக்கை காட்ட முடியுமா? என்று பிரபல இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய இயக்குனர் அமீர், 'விளம்பரங்கள் மூலம் பிரதமர் ஆனவர் மோடி. தேர்தலுக்கு முன் ரஜினிகாந்த், பவன்கல்யாண் போன்ற பெரிய நடிகர்களின் ஆதரவை பெற்று தான் மோடி பிரதமர் ஆனார்.
தன்னுடைய ஆட்சியின் தோல்விகளை மறைக்கவே இந்த கருப்புப்பண விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் மோடி. பிரதமரின் இந்த கருப்புப்பண அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த், அவர் நடித்த 'கபாலி' படத்தின் கணக்கை காட்ட முடியுமா? ரூ.150 டிக்கெட்டை ரூ.2000 வரை விற்பனை செய்தது நியாயமா? நாட்டில் எத்தனையோ கொடுமை நடந்தபோதெல்லாம் அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் கருப்பு பண நடவடிக்கைக்கு மட்டும் ரஜினிகாந்த் வாய்திறப்பதன் ரகசியம் என்ன' என்று அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.