அப்பா ஆகிவிட்ட தினேஷ் கார்த்திக்… இரட்டைக் குழந்தைகளுடன் வைரலாகும் புகைப்படம்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருந்துவருபவர் தினேஷ் கார்த்திக். இவர் சமீபத்தில் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் – தீபிகா பல்லிக்கல் ஜோடிக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ள செய்தியை தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரராக இருந்துவரும் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் கலக்கிவந்தார். சமீபகாலகமாக சர்வதேசப் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்துவரும் அவர், ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். அதோடு வர்ணனையாளராக செயல்பட்டு பழைய ஃபார்மிற்கு முன்னேறி வருகிறார்.

தீபிகா பல்லிக்கல் என்பவரைக் காதலித்து தினேஷ் கார்த்திக் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. மேலும் தங்களுடைய குழந்தைகளுக்கு கபிர் பல்லிக்கல் கார்த்திக், சியான் பல்லிக்கல் கார்த்திக் என்று அழகான பெயர்களையும் வைத்துள்ளனர். இதையடுத்து தினேஷ் கார்த்திக் பதிவிட்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

More News

புனித் ராஜ்குமார் இப்படிப்பட்ட நபரா? மரணத்திற்கு பின் தெரிய வந்த ஆச்சரியமான தகவல்!

பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் இன்று திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தது கன்னட திரை உலகையே ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் இந்திய திரை உலகில் உள்ள பிரபலங்கள் அனைவருமே

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் சிஎஸ்கே வீரரின் தங்கை!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்தப் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஒருவரின் தங்கை நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புனித் ராஜ்குமார் மறைவுக்கு அஜித்-ஷாலினி இரங்கல் செய்தி!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று மாரடைப்பு காரணமாக காலமானதை அடுத்து அவருக்கு அஜித் மற்றும் அவருடைய மனைவி ஷாலினி அஜித் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தில் தனுஷ்: ஆச்சரிய தகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் 'விடுதலை' படத்தில் தனுஷ் பணிபுரிந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீயான் விக்ரமின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸ்?

சியான் விக்ரம் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.