விஜய் மகன் இயக்கத்தில் நடிக்க தயார்: விக்ரம் மகன் துருவ் விக்ரம்

விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க தயார் என விக்ரம் மகன் துருவ் விக்ரம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் இயக்குனருக்கான படிப்பு படித்து முடித்து உள்ளார் என்பதும் விரைவில் அவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என்றும் கூறப்பட்டது. குறிப்பாக தளபதி விஜய் நடிக்கும் படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க தயார் என விக்ரம் மகன் துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார். 

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்த ’மஹான்’ திரைப்படம் இன்று அமேசானில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த துருவ் விக்ரம், ‘விஜய் மகன் சஞ்சய் எனக்கு சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர் என்றும் அவர் நல்ல கதையுடன் வந்தால் கண்டிப்பாக அவரது இயக்கத்தில் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.

இரண்டு பிரபலங்களின் வாரிசுகள் ஒரே படத்தில் இணைந்தால் அந்த படம் மாஸாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் அதிசயம் கோலிவுட்டில் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அம்மா என்று கூப்பிடச்சொன்ன லதா மங்கேஷ்கர்… நெகிழ்ச்சியில் கலங்கும் கிரிக்கெட் பிரபலம்!

இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் இறப்பு இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பல லட்சக்கணக்கான வெளிநாட்டு ரசிகர்களையும்

அஜித்துக்கு அரசியல் தேவையில்லை: இயக்குனர் சுசீந்திரன்

'அஜித்துக்கு அரசியல் தேவை இல்லை' என இன்று நடைபெற்ற 'வீரபாண்டியபுரம்' ஆடியோ விழாவில் இயக்குனர் சுசீந்திரன் பேசியுள்ளார். 

முத்தக்காட்சிக்கு கணவர் ஓகே சொன்னாரா? பதிலடி கொடுத்த தீபிகா படுகோன்!

பாலிவுட் குயின் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தீபிகா படுகோன்

சிவகார்த்திகேயனின் 20வது படம் குறித்த சூப்பர் தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'டான்' என்ற திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும்

ஆஸ்கர் இறுதி பட்டியலில் இந்திய ஆவணப்படம்… கண்கலங்கிய பெண் இயக்குநர்!

94 ஆவது ஆஸ்கர் விருதிற்கான இறுதிப்பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஒரு ஆவணப்படம் இடம்பிடித்துள்ளது. ஏற்கனவே