விக்ரம் மகன் துருவ் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Thursday,July 19 2018]

பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்திட வேண்டும் என்று பல நடிகர்கள் காத்திருக்கும் நிலையில் சீயான் விக்ரமின் மகன் துருவ்க்கு அந்த அதிர்ஷ்டம் முதல் படத்திலேயே கிடைத்துவிட்டது. பாலா இயக்கத்தில் துருவ் நடித்து வரும் 'வர்மா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் துருவ் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் துருவ்வை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விக்ரம், அடுத்ததாக தனது மகனை பிரபல தெலுங்கு இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். அவர்தான் பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா. நயன்தாரா நடித்த 'அனாமிகா', 'ராணா டக்குபாய் நடித்த 'லீடர்', வருண், தமன்னா நடித்த 'ஹேப்பி டேய்ஸ்' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சேகர் கம்முலா கூறிய ஆக்சன் கதை ஒன்று விக்ரமை வெகுவாக கவர்ந்ததால், துருவ்வின் அடுத்த படம் அவரது இயக்கத்தில் தான் என்று விக்ரம் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. 'வர்மா' படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது

More News

'நரகாசுரன்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்தசாமி நடித்த 'நரகாசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது.

ஸ்ரீதேவி கேரக்டரில் நடிக்கும் சூர்யா-கார்த்தி பட நாயகி

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே மற்றும் கார்த்தி நடிப்பில் ரஜத் ரவிசங்கர் இயக்கி வரும் படம் ஒன்றிலும் நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரித்திசிங்.

40 வருடங்களுக்கு பின் ரீமிக்ஸ் ஆகும் கமல் பட பாடல்

ஸ்ரீப்ரியா தயாரித்து நடித்த இச்சாதாரி பாம்பு படமான 'நீயா' படம் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது

கால்பந்து விளையாட்டு வீரரின் படத்தில் விஜய்சேதுபதி

சமீபத்தில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து முடிந்து அதில் பிரான்ஸ் நாடு கோப்பையையும் வென்றது என்பது அனைவரும் அறிந்ததே.

நீட் வினாத்தாள் தமிழ் மொழிபெயர்ப்பு தவறுக்கு தமிழக அரசே காரணம்: சி.பி.எஸ்.இ

சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாளின் தமிழ் பதிப்பில் மொழிபெயர்ப்பு தவறுகள் இருந்ததாகவும், இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும்